செய்திகள் :

``ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்'' - ஆடு, டிவி, அடுப்பு, பாத்திரங்களுடன் வந்த மக்கள்

post image

மைக் செட் கட்டுவதில் பிரச்னை

திண்டுக்கல், நத்தம் சட்டமன்றத் தொகுதி பூதகடி கிராமத்திலுள்ள கோயில் திருவிழா கடந்த ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது.

இதில் மைக் செட் கட்டுவதில் இரு சமூகங்களிடையே பிரச்னை ஏற்பட்டது. பிரச்னையில் ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இந்நிலையில், நேற்று செல்வகுமாரின் மனைவி வர்ஷா பூதகுடியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசாரும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நான்கு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை அவர் கைவிட்டார்.

போராட்டம்

இந்த வழக்கை திரும்ப பெறக் கோரி 300-க்கும் மேற்பட்ட முத்தரையர் சமுதாயத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட முத்தரையர் சமூக மக்கள்

இதற்காக ஆடு, டிவி, அடுப்பு, பீரோ, பாத்திரங்கள், குளிர்சாதன பெட்டி ஆகியவற்றுடன் வந்த சுமார் 300 முத்தரையர் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அனுப்பி வைத்தனர்.

மராத்தா போராட்டதால் ஸ்தம்பித்த மும்பை; சாலை ஆக்கிரமிப்புகளை காலிசெய்ய ஜராங்கேவிற்கு கோர்ட் உத்தரவு!

மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதியில் இருந்து 30 ஆயிரம் பேருடன் மும்பைக்கு வந்து கடந்த 29ம் தேதியில் இருந்து தென்மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற போர... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: அமைச்சரின் அறிவிப்புக்கு பின்னரும் ஆய்வுகள் தொடக்கம்; விவசாயிகள் முற்றுகையால் பதற்றம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ 675 கோடி செலவில் காவனூர் காமன்கோட்டை சிறுவயல், ஏ.மணக்குடி, கீழச்செல்வனூர், வேப்பங்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்கப்படும் என மத்திய அரசு ... மேலும் பார்க்க

அபராதம் செலுத்த தவறினால் மொட்டை; இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

கடந்த 2014-ம் ஆண்டு முதல் பாக் நீரிணைப்பில் உள்ள பாரம்பர்ய மீன்பிடிப்புப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சிறைபிடித்து வருகிறது.மேலும் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: '112 அடி கிணற்றைக் காணவில்லை'- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனூத்து வரை 19.5 கி.மீ தூரம் மதுரையை இணைக்கும் வகையில் மாநில சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய... மேலும் பார்க்க

``மாலை 6 மணிக்கு மேல் தனியார் அருவியாக மாறும் பழைய குற்றாலம்'' - விவசாய சங்கம் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியானது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், அருவி அருகே உள்ள பகுதிகள் ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் இருந்தது.... மேலும் பார்க்க

`சிறை பிடித்த இலங்கை' -கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் இடையே ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட மீனவர்கள்

ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்... மேலும் பார்க்க