செய்திகள் :

திண்டுக்கல்: '112 அடி கிணற்றைக் காணவில்லை'- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

post image

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்திலிருந்து அடியனூத்து வரை 19.5 கி.மீ தூரம் மதுரையை இணைக்கும் வகையில் மாநில சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மாநில சாலைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கையகப்படுத்தும் நிலங்களுக்கு 2018 தமிழக அரசு நில எடுப்பு சட்டத்தின் படி இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மற்றும் கிணற்றிற்கு ரூ. 30 ஆயிரம், தமிழக அரசு இழப்பீடாக வழங்குகிறது.

கிணற்றை காணவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

அதனால் 2013ஆம் ஆண்டு மத்திய அரசின் சட்டத்தின்படி இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆனால் தற்போது வரை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படாமல் தொடர்ந்து மாநில சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திடீரென 5 ஏக்கர் நிலத்திற்கு நீர் அளித்து வந்த ராஜ்குமார் என்ற விவசாயியின் 112 அடி கிணற்றை மாநில சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர் மூடியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 'கிணற்றைக் காணவில்லை' எனக் கூறி மாவட்ட நிர்வாகத்திற்கும், திமுக அரசுக்கும் எதிராக பதாகைகளை ஏந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர்.

``மாலை 6 மணிக்கு மேல் தனியார் அருவியாக மாறும் பழைய குற்றாலம்'' - விவசாய சங்கம் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியானது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலும், அருவி அருகே உள்ள பகுதிகள் ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் இருந்தது.... மேலும் பார்க்க

`சிறை பிடித்த இலங்கை' -கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் இடையே ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட மீனவர்கள்

ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்... மேலும் பார்க்க

`வனப்பகுதியில் தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம்' - சீமான் அதிரடி | Photo Album

தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம்தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம்தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம்தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம்தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டம்தடையை மீறி மாடு மேய்... மேலும் பார்க்க

`மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் உரிமைகளைக்கூட திமுக அரசு பறிகொடுக்கிறது' - பி.ஆர்.பாண்டியன்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அதன் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்ட... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ``3 தலைமுறை கொத்தடிமையாக வாழ்கிறோம்..'' - பழங்குடியினர் புகாரால் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு ஊராட்சி சேர்ந்த புலிக்குத்தி காடு கிராமம் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் 3 பளியர் பழங்குடி குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து ... மேலும் பார்க்க

பழநி: கோவில் பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்; கோவில் சேவைகள் முடக்கம்; பின்னணி என்ன?

பழநி முருகன் கோவிலுக்குக் கடந்த வெள்ளிக்கிழமையன்று வழக்கறிஞரான பிரேமலதா என்பவர் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தோடு வந்துள்ளார்.சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்குவதற்காக வின்ச் நிலையத்தில் கட்டணச் சீ... மேலும் பார்க்க