செய்திகள் :

ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளமா?

post image

தெற்கு டகோடா பகுதியில் மிக உயரத்தில் இருக்கும் கோபுரத்தில் ஏறி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பல்பை மாற்றும் தொழிலாளிக்கு 20 ஆயிரம் டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள பகுதியே ரேபிட் சிட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த கெவின் ஷேமிட்த் என்பவர் ஒவ்வொரு முறை இந்த கோபுரத்தின் மீது ஏறி பல்பை மாற்றும்போதும், இவருக்கு 20 ஆயிரம் டாலர் சம்பளம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது மட்டுமல்ல, இந்தப் பகுதியில் பல்வேறு கோபுரங்களிலும் இவர் மின் விளக்குகளை மாற்றி வருகிறாராம். சில நேரங்களில் மேலே செல்ல செல்ல மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமாம். அப்போது இவர் தூசு போல பறந்து சென்றுவிடுவோமோ என்று நினைத்திருக்கிறாராம். நண்பர்கள் சிலருக்கு நான் இந்த வேலையைச் செய்கிறேன் என்று நம்பவே முடியாது. அவர்கள் எல்லாம் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே பார்த்தாலே பயமாக இருக்குமே என்பார்கள் என்கிறார்.

இந்த தகவலை அறிந்த இளைஞர்கள் பலரும், மின்சார பல்புதானே, நாங்களே மாற்றுவோம் என்று, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். இவர் மாற்றுவது, 457 அடி உயரத்தில் இருக்கும் கோபுரத்தில்.

உயிரைப் பணயம் வைத்து இவர் இந்த கோபுரத்தின் மீது ஏறுகிறார். கடும் பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த வேலையை செய்ய வேண்டும். பலரும் இது பற்றிய விடியோவைப் பார்த்து இந்த கோபுரத்தில் ஏறி இறங்கவே 6 மாதம் ஆகிவிடும் போல இருக்கிறதே என்று கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இது ஒரு தொலைத்தொடர்பு கோபுரம் என்றும், உலகிலேயே ஆபத்தான பணிகளில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலராலும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சீன ராணுவ அணிவகுப்பு! ஒன்றாகக் கலந்துகொண்ட சீன, ரஷிய, வடகொரிய அதிபர்கள்! முதல்முறை...

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அந்த நாட்டு அதிபர் ஜின்பிங்குடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கலந்துகொண்டனர்.இவர்கள் மூவரும் முதல்முறையாக ஒன்றாகக் கலந்துகொள்ளு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பலூச் கட்சியின் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்! 14 பேர் பலி!

பாகிஸ்தானின், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் பேரணியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவேட்டாவில், பலூசிஸ்தான் தேசிய கட்சியின் நிறுவனர் சர்தார் அ... மேலும் பார்க்க

சீனாவில் புதின், கிம் ஜாக் உன்! அமெரிக்காவுக்கு எதிரான சதி என டிரம்ப் குற்றச்சாட்டு!

இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சீனாவில் நடத்தப்பட்ட விழாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு விழா... மேலும் பார்க்க

விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தன்னுடைய மகளுடன், சீனத் தலைவர் பெய்ஜிங் சென்றுள்ளார். விமானத்தில் அல்ல, அவர் எப்போதும் செல்லும் அந்த பாரம்பரிய பச்சை நிற ரயிலில்தான்.கிம் ஜாங் உன், தன்னுடைய 14 ஆண்டு கால... மேலும் பார்க்க

எஸ்400 வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை!

தரையிலிருந்து வான்வெளி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ரஷியாவின் எஸ்400 டிரையம்ப் வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது: அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா்

‘ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொ... மேலும் பார்க்க