செய்திகள் :

பஞ்சாபில் வெள்ளம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு!

post image

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள நிலைமை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,

வெள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் முதல்வர் ஸ்ரீ பகவந்த் சிங் அறிவுறுத்தலின்படி, பஞ்சாப் முழுவதும் உள்ள அனைத்து அரசு/உதவி பெறும்/அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தனியார்ப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் செப்டம்பர் 7, 2025 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 3 வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்திருந்தது.

இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் மற்றும் பருவக்கால ஓடைகள் பெருக்கெடுத்து ஓடுவதால் பஞ்சாப் பெரும் வெள்ளத்தை எதிர்கொள்கிறது. பஞ்சாபில் பெய்த மழையும் மாநிலத்தில் வெள்ள நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

பஞ்சாப் முழுவதும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, வெள்ளம் காரணமாக இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 3.50 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது.

The Punjab government on Wednesday extended the closure of all schools, colleges and universities till September 7 due to the prevailing flood situation in the state.

ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ.2,500 வரை குறையும் என எதிர்பார்ப்பு!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு ஏசி விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டில் உள்ள நான்கு வக... மேலும் பார்க்க

தொடரும் வரதட்சணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!

கர்நாடக மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் 28 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகலகுண்டேவில் வசித்துவந்தவர் பூஜாஸ்ரீ. இவர் வங்கி ஒன்றின் காசாளராக பணியாற்... மேலும் பார்க்க

எரிவதில் எண்ணெய் ஊற்றும் ரஷியா! இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் மேலும் தள்ளுபடி

ஏற்கனவே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை இந்தியாவுக்கு மேலும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவ... மேலும் பார்க்க

திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை கலந்துகொண்டுள்ளார்.இதற்காக சென்னையில் இருந்து இன்று பகல் தனி விமானம் மூலம் திருச்சி வந்த கு... மேலும் பார்க்க

ரூ.33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 20 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ரூ.33 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 20 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் பட்டாலியன் எண்.1 மாவோயிஸ்டுகளின் வலியான ராணுவ அம... மேலும் பார்க்க

ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!

ஹிமாசல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் செவ்வாய்க்கிழமை இரவு பலியாகினர்.மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் ப... மேலும் பார்க்க