செய்திகள் :

ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ.2,500 வரை குறையும் என எதிர்பார்ப்பு!!

post image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு ஏசி விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் உள்ள நான்கு வகையான ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படவிருக்கிறது.

அதாவது, 12%, 28% ஆகிய ஜிஎஸ்டி விகிதங்களை நீக்கிவிட்டு 5%, 18% என்ற இரு விகிதங்களை மட்டும் நடைமுறைப்படுத்த முடிவெடுத்து அறிவிக்கப்படவிருப்பதால், தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருக்கும் ஏசிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியாக குறையும். இதனால், அதன் விலைகள் ரூ.1500 முதல் ரூ.2500 வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பண்டிகைக் காலங்கள் தொடங்க இருக்கும் நிலையில், ஏற்கனவே விற்பனையை தீவிரமாக்க திட்டமிட்டு வரும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு நடவடிக்கைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.

எப்போது ஜிஎஸ்டி குறைப்பு குறித்த அறிவிப்பு வந்ததோ, அப்போதே பலரும் புதிய பொருள்கள் வாங்குவதை தள்ளிப்போட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் இது குறித்த அறிவிப்பு வெளியாகி, 10 சதவீதம் அளவுக்கு வரி விகிதம் குறையும்போது வாங்கலாம் எனக் காத்திருக்கிறார்கள்.

அதுபோல, 32 இன்ச் அளவு வரை உள்ள தொலைக்காட்சிகளுக்கும் தற்போது இருக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி இனி 18 சதவீதமாகக் குறையும் என்பதால், தொலைக்காட்சி விலைகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AC sales are expected to pick up after the two-day GST Council meeting, which begins today and is chaired by Union Finance Minister Nirmala Sitharaman.

இதையும் படிக்க... விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்

ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து படுகாயமடைந்த, மற்றொரு பச்சிளம் குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தூர் மாவட்டத்தில் உள்ள, மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத... மேலும் பார்க்க

ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், இளைஞர்களுடன் இரவுச் சாலையில் நடனமாடிய விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில், பாடலுக்கு ஏற்பவும் இளைஞர்களின் நடன அசைவுகளுக்கு ஏற்பவும் த... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளம் பேரிடராக அறிவிப்பு! 30 பேர் பலி!

பஞ்சாபை பேரிடர் பாதித்த மாநிலமாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இன்று வரை 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் தீவிரமடையும் கனமழை! 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின், மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஏரா... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!

தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அஞ்சலி செலுத்தினார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று (செப்.2) இந்தியா வந்தடைந்தார... மேலும் பார்க்க

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

வெளிநாட்டுப் பயணங்களில் சிரித்துக் கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார் என்று பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் மக்களவை எதிா்க்க... மேலும் பார்க்க