ரூ.100 கோடி அல்ல, அதற்கும் அதிகமாக வசூலித்த லோகா: அதிகாரபூர்வ அறிவுப்பு!
ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ.2,500 வரை குறையும் என எதிர்பார்ப்பு!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு ஏசி விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் உள்ள நான்கு வகையான ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படவிருக்கிறது.
அதாவது, 12%, 28% ஆகிய ஜிஎஸ்டி விகிதங்களை நீக்கிவிட்டு 5%, 18% என்ற இரு விகிதங்களை மட்டும் நடைமுறைப்படுத்த முடிவெடுத்து அறிவிக்கப்படவிருப்பதால், தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருக்கும் ஏசிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியாக குறையும். இதனால், அதன் விலைகள் ரூ.1500 முதல் ரூ.2500 வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பண்டிகைக் காலங்கள் தொடங்க இருக்கும் நிலையில், ஏற்கனவே விற்பனையை தீவிரமாக்க திட்டமிட்டு வரும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு நடவடிக்கைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
எப்போது ஜிஎஸ்டி குறைப்பு குறித்த அறிவிப்பு வந்ததோ, அப்போதே பலரும் புதிய பொருள்கள் வாங்குவதை தள்ளிப்போட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் இது குறித்த அறிவிப்பு வெளியாகி, 10 சதவீதம் அளவுக்கு வரி விகிதம் குறையும்போது வாங்கலாம் எனக் காத்திருக்கிறார்கள்.
அதுபோல, 32 இன்ச் அளவு வரை உள்ள தொலைக்காட்சிகளுக்கும் தற்போது இருக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி இனி 18 சதவீதமாகக் குறையும் என்பதால், தொலைக்காட்சி விலைகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AC sales are expected to pick up after the two-day GST Council meeting, which begins today and is chaired by Union Finance Minister Nirmala Sitharaman.
இதையும் படிக்க... விமானம் வேண்டாம்! ரயிலில் பெய்ஜிங் சென்ற கிம் ஜாங் உன்! இதுவே முதல்முறையாம்