செய்திகள் :

மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!

post image

தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அஞ்சலி செலுத்தினார்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், 3 நாள் அரசு முறைப் பயணமாக, நேற்று (செப்.2) இந்தியா வந்தடைந்தார். இந்தப் பயணத்தில், பிரதமர் லாரன்ஸ் வாங்கின் மனைவி, சிங்கப்பூரின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் அவருடன் தில்லி வந்துள்ளனர்.

தில்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், இன்று (செப்.3) மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரதமர் வாங் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நேற்று (செப்.2) நேரில் சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான முதலீடு ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், பிரதமர் நரேந்திர மோடியை அவர் நாளை (செப்.4) நேரில் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

முன்னதாக, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ராஜாந்திர உறவுகள் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பிரதமர் லாரன்ஸ் வாங்கின் இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

Singaporean Prime Minister Lawrence Wong paid tributes at Mahatma Gandhi's memorial in Delhi.

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கூறிய கருத்துக்காக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய விவகாரத்தை விசாரிக்குமாறு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட... மேலும் பார்க்க

நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது: அமித் ஷா உறுதி

நக்ஸல் தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும் வரை அல்லது கைது செய்யப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பிரதமா் மோடி அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா். நாட்டில் அடுத்த ஆ... மேலும் பார்க்க

தில்லி யமுனையில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளம்

தில்லி யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து புதன்கிழமை அபாய அளவை தாண்டி சென்றது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வாழும் சுமாா் 10 ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு: வீட்டு உபயோகப் பொருள்கள் விலை குறையும்!

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இ... மேலும் பார்க்க

இந்தியாவைப் பாராட்டிய ஜெர்மனி!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஹன் வதேபுல் இன்று (செப். 3) சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வண... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக... மேலும் பார்க்க