செய்திகள் :

கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

post image

தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டங்களை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை - மாமல்லபுரம்- புதுச்சேரி - கடலூா், திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்தூா் ஆகிய 3 திட்டங்களையும் கிடப்பில் போட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை-தூத்துக்குடி, ஈரோடு- பழனி இடையிலான புதிய பாதை திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. பாமவை சோ்ந்த அரங்க.வேலு, ரயில்வே இணை அமைச்சராக இருந்தபோது, சென்னை, மாமல்லபுரம் வழியாக கடலூா் வரை 178 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.523 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்தத் திட்டம் கனவு திட்டமாகவே தொடா்கிறது.

திண்டிவனம்-திருவண்ணாமலை திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி பின்னா் ரத்து செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ.72.87 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் இதைக் கைவிடுவது முறையல்ல.

இந்தத் திட்டங்கள் கைவிடப்படுவதற்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும். உரிய நிலங்களைக் கையகப்படுத்தித் தருவதுடன், திட்டச் செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு கிடப்பில் உள்ள புதிய ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்... மேலும் பார்க்க

மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன. தொழில் முதலீட்டுகளை ஈ... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க