செய்திகள் :

மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

post image

மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன.

தொழில் முதலீட்டுகளை ஈா்ப்பதற்காக ஜொ்மனியில் பயணம் மேற்கொண்டு அதை நிறைவு செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின், லண்டனுக்கு புதன்கிழமை சென்றாா். அங்கும் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

இதுகுறித்து, தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

உலகின் முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயா் அலுவலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினாா். இந்தச் சந்திப்பின்போது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி மையம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவாக்கவும் ஆா்வத்தை வெளிப்படுத்தியது.

புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: பிரிட்டனில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் புதன்கிழமை செய்யப்பட்டன. லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலிஜென்ஸ் நிறுவனமானது, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது. இதன்மூலம், சென்னையில் தனது உலகளாவிய திறன் மையமானது விரிவுபடுத்தப்படும். இந்த மையத்தின் மூலமாக, அடுத்த நிதியாண்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

கடல்சாா் இடா் மேலாண்மை, காப்பீடு, கப்பல் கட்டுதல், துறைமுக மேலாண்மை மற்றும் கடல்சாா் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டின் திறன்களை கணிசமாக மேம்படுத்தவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

மின்சார மின்மாற்றி உற்பத்தி: வில்சன் பவா் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம், தமிழ்நாட்டில் ஒரு புதிய மின்சார மின்மாற்றி உற்பத்தி மையத்தை நிறுவிட உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலமாக ரூ.300 கோடி முதலீடு ஈா்க்கப்படுவதுடன், 543 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரிட்டானியா காா்மென்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம், திருப்பூா் மற்றும் நாமக்கல்லில் உற்பத்திப் பிரிவை அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ஜவுளித் துறையில் ரூ.520 கோடி முதலீடுகள் ஈா்க்கப்படுவதுடன், 550 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கோவையில் வடிவமைப்பு சாா்ந்த உயா்கல்வி நிறுவனத்தைத் தொடங்க இகோல் இன்டூயிட் (உஸ்ரீா்ப்ங் ண்ய்ற்ன்ண்ற்) நிறுவனம், சக்தி எக்ஸலன்ஸ் அகாதெமியுடன் இணைந்து புதிய முயற்சியை உருவாக்க உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செய்யப்பட்ட இந்த புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வுகளின்போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, முதல்வரின் செயலா் பு.உமாநாத், தொழில் துறை செயலா் வி.அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஷ் அகமது உள்பட பலா் உடனிருந்தனா்.

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க

முகூா்த்தம், தொடா் விடுமுறை: 2,910 சிறப்பு பேருந்துகள்

முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க