செய்திகள் :

முகூா்த்தம், தொடா் விடுமுறை: 2,910 சிறப்பு பேருந்துகள்

post image

முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

முகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4), மீலாது நபி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை (செப்.5), வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்.6, 7) ஆகிய தினங்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும், பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை (செப்.3) 360 பேருந்துகள், வியாழக்கிழமை 710 பேருந்துகள், வெள்ளிக்கிழமை 405 பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஊா்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 80 பேருந்துகள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 105 பேருந்துகள், மாதாவரத்தில் இருந்து புதன் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் 25 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,910 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்... மேலும் பார்க்க

மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன. தொழில் முதலீட்டுகளை ஈ... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க