செய்திகள் :

மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இருக்க மாட்டார்கள்: மமதா பானர்ஜி

post image

மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத சூழலை பாஜக எதிர்கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வங்க மொழி பேசும் மக்களுக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி விதி 169-கீழ் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதனால் கடும் அமளி நிலவியது. இதனைத் தொடர்ந்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அமளியின்போது ஆளும் கட்சியினர் தண்ணீர் பாட்டிலை வீசியதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் சட்டப்பேரவையில் முதல்வர் மமதா பானர்ஜி, பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், “பாஜக தவிர்க்க முடியாத தோல்வியைச் சந்திக்கும். வங்காள மக்களுக்கு எதிராக மொழியியல் பயங்கரவாதத்தை நடத்தும் எந்தக் கட்சியும் மேற்கு வங்கத்தில் வெற்றிபெற முடியாது.

பாஜக ஒரு வாக்குத் திருட்டுக் கட்சி, அதன் மையத்திலே ஊழல் நிறைந்துள்ளது. வங்காள மக்களை துன்புறுத்திவதிலும் ஏமாற்றுவதிலும் வல்லமைப் பெற்றதாகவுள்ளது.

வங்காள மக்களை துன்புறுத்தும் பாஜகவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இல்லாத சூழல் விரைவில் வரும். மக்களே அதை உறுதி செய்வார்கள்” என்றார்.

வெளி மாநிலங்களில் குறிப்பாக, அஸ்ஸாம், ஒடிஸா, மகாராஷ்டிரம், தில்லி, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

West Bengal Chief Minister Mamata Banerjee has said that the BJP will face a situation in West Bengal where there is not even a single MLA from their party.

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக்... மேலும் பார்க்க

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழ... மேலும் பார்க்க

மமதா பேச்சுக்கு எதிர்ப்பு! மேற்கு வங்க பேரவை அமளியில் பாஜக கொறடா காயம்!

மேற்கு வங்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டபோது காயம் அடைந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.வெளி மாநிலங்களில்... மேலும் பார்க்க

மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்: ராகுல்

மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

பறவை மோதல்! விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது கழுகு மோதியதால், அதன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.விஜயவாடாவில் இருந்து பெங்களூரு நோக்கி, இன்று (செப்.4)... மேலும் பார்க்க