செய்திகள் :

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

post image

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு அமைதியைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம், தில்லியில் இன்று கையெழுத்தாகியுள்ளது.

தில்லியில் இன்று மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், குக்கி - ஜோ குழுவினர் ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஒப்பந்தத்தில், முக்கியமானதாக தேசிய நெடுஞ்சாலை - 2ஐ மீண்டும் திறப்பது குறித்து குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் இயக்கத்துக்கு பெருந்துணையாக இருக்கும். இந்தப் பாதையில் (தேசிய நெடுஞ்சாலையில்) அமைதியை உறுதிப்படுத்த பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து பணியாற்றுவதாக குக்கி - ஜோ அமைப்பு உறுதியளித்துள்ளது.

மேலும், மோதல் ஏற்படக்கூடிய இடங்களிலிருந்து தங்களின் 7 முகாம்களை இடமாற்றம் செய்வதாக குக்கி தேசிய அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியினர் உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து, முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆயுதங்களை சிஆர்பிஎஃபிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் சில மறுபரிசீலனை செய்யப்பட்ட அடிப்படை விதிகளும் அடங்கும். இருப்பினும், அவை அடுத்தாண்டு முதலே நடைமுறைக்கு வரும்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இரண்டு சமூகத்தினரிடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த மோதலில், இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; 60,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே, மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து, ஒருமுறைகூட பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில்தான், இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் பிரதமர் மோடி செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kukis agree to reopen National Highway-2 in Manipur

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நர... மேலும் பார்க்க

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

காங்கிரஸை போல் வரி விதித்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர... மேலும் பார்க்க

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க

குஜராத்தில் தொடரும் கனமழை! உயர் எச்சரிக்கையில் 113 அணைகள் !

குஜராத் மாநிலத்தில், சுமார் 92.64 சதவிகிதம் பருவமழை பொழிவானது பதிவாகியுள்ள நிலையில், 113 அணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையி... மேலும் பார்க்க

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழ... மேலும் பார்க்க