செய்திகள் :

"தோனிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்; அவரைப்போல..." - பாக்., மகளிர் அணி கேப்டன் ஓபன்

post image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும்.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் என மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கவிருக்கின்றன.

இதுவரை நடைபெற்றிருக்கும் 12 உலகக் கோப்பைத் தொடர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றன.

பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா
பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா

இதனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் இம்முறை கண்டிப்பாகத் தங்களின் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் எனத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தும் கேப்டன் ஃபாத்திமா சனா, உலகக் கோப்பையில் பதற்றமில்லாமல் அணியை வழிநடத்த, கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை இன்ஸ்பிரேஷனாக ஏற்றிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் பேசிய ஃபாத்திமா சனா, "உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அணியை வழிநடத்தும்போது ஆரம்பத்தில் பதற்றம் ஏற்படுவது இயல்புதான்.

ஆனால், ஒரு கேப்டனாக தோனிதான் எனக்கு இன்ஸபிரேஷன். இந்தியா மற்றும் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக அவரின் ஆட்டங்களை நான் பார்த்திருக்கிறேன்.

தோனி (Dhoni)
தோனி (Dhoni)

களத்தில் முடிவெடுக்கும் தன்மை, அமைதி, தனது வீரர்களைத் தக்கவைப்பது என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

அவரின் நேர்காணல்களையும் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நான் கேப்டனாகப் பொறுப்பேற்றதும், தோனியைப் போல ஆக வேண்டும் என்றுதான் நினைத்தேன்" என்று கூறினார்.

IPL-ல் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்; 25 வருட கரியரை முடித்துக் கொண்ட இந்திய சாம்பியன்!

ஐபிஎல்-லில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரரான அமித் மிஸ்ரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.சுழற்பந்துவீச்சாளரான இவர் 2003-ல் வங்காளதேசம், தென்னாப்பிரிக்க... மேலும் பார்க்க

"நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்..." - இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்

இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்.கடை... மேலும் பார்க்க

"பேட் கம்மின்ஸ் அப்படி செய்வாரா?" - பும்ரா மீதான பணிச்சுமை விவாதத்தில் இந்திய முன்னாள் வீரர் கேள்வி

கிரிக்கெட் உலகில் தற்போது நம்பர் ஒன் பவுலராக விளங்குபவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா.தனது தனித்துவமான பவுலிங் ஸ்டைலால் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் பும்ராவுக்கு, அந்த பவுலிங் ஸ்டைலே ஆபத்... மேலும் பார்க்க

RCB stampede: "மிகவும் சந்தோஷமான தருணம் துக்கமானதாக மாறிவிட்டது" - கோலி உருக்கம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஒரு வழியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த சீசனில் கோப்பையை வென்றது.ஆன... மேலும் பார்க்க

Mitchell Starc: ``இதுவே சிறந்த வழி'' - சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை 65 T20 போட்டிகளில் வி... மேலும் பார்க்க

"லலித் மோடியின் சுயநலம்..." - ஸ்ரீசாந்த்தை அறைந்த வீடியோ வெளியானது குறித்து ஹர்பஜன்

இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த 2008-ல், மும்பை vs பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல் போட்டியில் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்த செயல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த சம்பவத்துக்குப... மேலும் பார்க்க