செய்திகள் :

தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?

post image

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல்களும், குழப்பங்களும் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக பாஜகவில் தனித்தனி கோஷ்டியாக செயல்படக் கூடாது என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், அமித் ஷாவின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன், மாநில பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்​. ராஜா, எல்​.​ முரு​கன், வானதி சீனி​வாசன், நாராயணன் திருப்பதி, சரஸ்​வ​தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருப்பினும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. அண்ணாமலை கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இருப்பினும், ஆலோசனைக் கூட்ட நாளில் திருமண நிகழ்வு அழைப்புகள் இருந்ததால், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை பதிலளித்தார்.

ஏனெனில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவிவகித்த போது, திராவிட கட்சிகள் மீது சரமாரியான கேள்விகளை எழுப்பி வந்தார். இந்த நிலையில்தான், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்புகளும் குறைந்தன. இருப்பினும், அண்ணாமலை பொறுப்பில் இருந்தபோது, 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தனிக்கட்சி ஒன்றை அண்ணாமலை தொடங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகின்றன.

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

உயர்கல்வியில் அதிக நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மை பெற்றிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,தரவரிசைப் பட்டியல் 2025: உயர்கல்வி சிறந்த த... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜகவில் பொறுப்பு!

தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளராக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நவ. 30-க்குள் அமல்படுத்த உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவ. 30-க்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மது அருந்துபவா்கள் மதுபாட்டில்க... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அம... மேலும் பார்க்க

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? எங்கு தொடங்கிறார்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தலையொட்டிய தனது சுற்றுப்பயணத்தை வரும் செப். 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து அரச... மேலும் பார்க்க

அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: அமல்படுத்த உத்தரவு!

தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2007 முதல் 2009 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1... மேலும் பார்க்க