செய்திகள் :

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

post image

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் மேத்யூ பிரீட்ஸ்க் அதிகபட்சமாக 77 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (58 ரன்கள்), அய்டன் மார்க்ரம் (49 ரன்கள்), டெவால்ட் பிரேவிஸ் (42 ரன்கள்), ரியான் ரிக்கல்டான் (35 ரன்கள்) எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடில் ரஷீத் 2 விக்கெட்டுகளையும், ஜேக்கோப் பெத்தேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

South Africa, batting first in the second ODI against England, scored 330 runs for the loss of 8 wickets.

இதையும் படிக்க: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில்... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள... மேலும் பார்க்க

துலீப் கோப்பை: அரையிறுதியில் 184 ரன்கள் குவித்த ருதுராஜ்!

துலீப் கோப்பையின் அரையிறுதியில் ருதுராஜ் கெய்க்வாட் 184 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் அவரது வெஸ்ட் ஜோன் (மேற்கு மண்டல) அணி 363 ரன்கள் குவித்தது. பெங்களூரில் நடைபெற்றுவரும் துலீப் கோ... மேலும் பார்க்க

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

ஐபிஎல் தொடர் தனக்கு பொருளாதார ரீதியில் தனக்கு பெரிதும் உதவியதாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட... மேலும் பார்க்க

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார். ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீர... மேலும் பார்க்க