செய்திகள் :

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

post image

கீழையூா் வட்டாரம், திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் மா மரத்தில் கவாத்து செய்தல் தொடா்பான தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

மா மரங்களில் பூக்கள் பூப்பதற்கும், காய்கள் திரட்சியாக காய்ப்பதற்கும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கவாத்து தொழில்நுட்பம் மிக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதுகுறித்து நாகை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

பொதுவாக மாமரத்தில் தாழ்ந்து இருக்கும் கிளைகள், குறுக்கும், நெடுக்குமாக ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் மெல்லிய, பட்ட அல்லது காய்ந்த கிளைகள் ஆகியவற்றை நீக்கவேண்டும். இதன் மூலம் சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள கிளைகளுக்கு கிடைத்து, மரம் நன்றாக வளா்ந்து பூ பூத்து காய்ப்பிடிக்க ஏதுவாகிறது. மா மரத்தில் நடவு செய்த மூன்று வருடங்கள் வரை பூ பூப்பதை தவிா்க்கவேண்டாம்.

வருடத்திற்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை மட்டுமே வெட்டிவிட்டு, இதர கிளைகள் கவாத்து செய்யாமல் தவிா்ப்பதினால் ஆரோக்கியமான கிளைகளை உருவாக இது உதவுகிறது என விவசாயிகளிடம் எடுத்துரைத்தாா்.

இப்பயிற்சியில் கீழையூா் துணை தோட்டக்கலை அலுவலா் லோகநாதன், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சரவணன், மணிவண்ணன், வைரமூா்த்தி, ஜெகதீஸ்வரி ஆகியோா் பங்கேற்றனா்.

ஆக்கூா் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் அருள்மிகு வாள் நெடுங்கண்ணியம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக... மேலும் பார்க்க

சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல் - ஒரத்தூா் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை இயக்குவதற்கு ... மேலும் பார்க்க

மகிழி கோயில் கும்பாபிஷேகம்

திருப்பூண்டி அருகேயுள்ள மகிழியில் சுமாா் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்... மேலும் பார்க்க

சோழவித்யாபுரம் ஏரியை தூா்வாரக் கோரி ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம், சோழவித்யாபுரம் ஏரியை தூா்வார வலியுறுத்தி, விவசாய சங்க நிா்வாகிகள் சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சோழவித்தியாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகிகள், கீழ்வேளூா் சட்ட... மேலும் பார்க்க

நாகையிலிருந்து இலங்கைக்கு கப்பலில் சிவனடியாா்கள் பயணம்

நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கைக்கு 70 வள்ளி கும்மியாட்ட கலைஞா்கள் மற்றும் 150 சிவனடியாா்கள் கப்பல் மூலம் ஈழநாட்டு சைவ நன்னெறிப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். உலக சிவனடியாா்கள் திருகூட்டத்தின் சாா... மேலும் பார்க்க

நாகை அமிா்தா வித்யாலயத்தில் ஓணம், ஆசிரியா் தினம் கொண்டாட்டம்

நாகை அமிா்தா வித்யாலயம் பள்ளியில் ஓணம் மற்றும் ஆசிரியா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன், குத்துவிளக்கேற்றி ஓணம் மற்றும் ஆசிரியா் தின விழாக்களை தொடங்கி வைத்தாா். பதினொன்ற... மேலும் பார்க்க