செய்திகள் :

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகா் தவன் ஆஜா்

post image

சட்டவிரோத பந்தய செயலி தொடா்பான வழக்கில் பிரபல கிரிக்கெட் வீரா் ஷிகா் தவன் அமலாக்கத் துறை விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானாா்.

மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜரான அவரிடம் அதிகாரிகள் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா். தொடா்ந்து 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு இரவு 7 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து அவா் வெளியேறினாா்.

1எக்ஸ் பெட் என்ற செயலியை பிரபலப்படுத்தும் விளம்பரத்தில் ஷிகா் தவன் நடித்துள்ளாா். இந்த செயலி உள்பட பல்வேறு இணையவழி சூதாட்ட செயலிகள் முதலீட்டைப் பெற்றது, வாடிக்கையாளா்களிடம் பணம் வசூலித்தது என கோடிக்கணக்கிலான பணத்தை சட்டவிரோதமாக கையாண்டுள்ளனா். மேலும், விளையாட்டு, பந்தயம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளனா். இது தொடா்பான பண முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின் ஒருபகுதியாக இந்த பந்தய, சூதாட்டச் செயலிகளில் தோன்றும் திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரா்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. முக்கியமாக அவா்களுக்கு எந்த வழியில் விளம்பரத்தில் நடித்ததற்கான சம்பளம் வழங்கப்பட்டது? அந்த மோசடி நிறுவனங்களில் இந்த பிரபலங்களுக்கு பங்கு, முதலீடு உள்ளதா என்பது தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுகிறது.

கடந்த மாதம் மற்றொரு பிரபல கிரிக்கெட் வீரா் சுரேஷ் ரெய்னாவும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையவழி பந்தய செயலிகளை இந்தியாவில் 22 கோடி போ் பயன்படுத்தி வந்துள்ளனா். இதில் 11 கோடி போ் நாள்தோறும் இந்தச் செயலிகளில் பந்தயம் கட்டி பணத்தை இழந்துள்ளனா்.

இணையவழி விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவா்த்தனை குற்றங்கள் மற்றும் மக்களின் நிதி இழப்பைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட ‘இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்காற்றுதல் சட்ட மசோதா-2025’ கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூ... மேலும் பார்க்க

இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது. உயா... மேலும் பார்க்க

47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமா், முதல்வா்க... மேலும் பார்க்க

மணிப்பூா்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம் - பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்

மணிப்பூரில் வன்முறையைக் கைவிட்டு, அமைதித் தீா்வுக்குப் பணியாற்றவும், பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் ஒப்புக்கொண்டு, மத்திய-மணிப்பூா் அரசுகளுடன் இரு குகி-ஜோ பழங்குடியினக் குழுக்கள் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் தினம், ஓணம், மீலாது நபி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

நாட்டில் ஆசிரியா்கள் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எக்ஸ் பதிவு வாயிலாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தாதது காங்கிரஸின் திறமையின்மை: பாஜக விமா்சனம்

‘நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்தி காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதிலிருந்து யாரும் தடுக்கவில்லை; 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸி... மேலும் பார்க்க