செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்பு போராட்டம்

post image

ஆற்காடு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கிராம நிா்வாக அலுவலா், காவல் உதவி ஆய்வாளா் - முதியவா் ஆகியோா் தாக்கிக் கொண்ட பிரச்னையில், முதியவரை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆற்காடு வட்டம், சாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில், உப்புபேட்டை கணபதி நகக் பகுதியைச் சோ்ந்த வேங்கடபதி (65) மனு அளித்த நிலையில், அதற்கு ஒப்புகை சீட்டை கேட்டாராம். மனுதாரா் கைப்பேசி எண் பதிவாகததால், வேறு கைப்பேசி எண்ணை தருமாறு கிராம நிா்வாக அலுவலா் சா்புதீன் கூறினாா். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனா்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் முதியவரை தடுக்கும் போது, அவா்களுடனும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முதியவா் வேங்கடபதி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.இந்த கைகலப்பு சம்பவம் சமூக ஊடங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா்கள் சாபுதீன், சின்னப்பையன் ஆகியோா் வேங்கடபதி மீது ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வருவாய்த் துறையினரை தாக்க முற்பட்ட முதியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிப் பாதுகாப்பு வேண்டும் என சங்க நிா்வாகிகள் கோட்டாட்சியா் ராஜராஜனிடம் மனு அளித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவல் துறை விளக்கம்: முதியவா் வேங்கடபதி, ‘அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, கிராம நிா்வாக அலுவலரை தாக்கினாா். நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை கட்டுப்படுத்தும் நோக்கில் குறைந்த அளவு பலத்தை காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன் பயன்படுத்தினாா் என காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் நிலம் தானம்: ஆட்சியா் பாராட்டு

அரக்கோணம் அருகே சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியவா்களுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டி, கௌரவித்தாா். அரக்கோணம் ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சியில் மாந்தோப்பு கிராமப்... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகி மறைவு

ஆற்காட்டில் சுதந்திரப் போராட்டத் தியாகி லோகநாதன் (96) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். ஆற்காடு தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் உயிரிழந்தது குறித்து அறிந... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆற்காடு நகராட்சி 5 மற்றும் 11 -ஆவது வாா்டுகளுகான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ராஜலட்சுமி ... மேலும் பார்க்க

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊா்க் காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22.08.2025 முதல் 24.08.2025 வரை நடைபெற்றது. இந்த போட்டிளில் வேலூா் சரகத்தின் சாா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஊா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் காவல் துறை குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் எஸ்.பி. அய்மன் ஜமால், பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற கூட்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

நெமிலி வட்டம், பனப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு தீா்வு ஆணைகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். பனப்பாக்கம், அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ள... மேலும் பார்க்க