செய்திகள் :

சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் நிலம் தானம்: ஆட்சியா் பாராட்டு

post image

அரக்கோணம் அருகே சாலைப் பணிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியவா்களுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டி, கௌரவித்தாா்.

அரக்கோணம் ஒன்றியம், புதுகேசாவரம் ஊராட்சியில் மாந்தோப்பு கிராமப் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதிக்கு சாலை வசதியே இல்லை. கிராமத்தினா் வயல்களின் வழியே சென்று வந்தனா். இந்நிலையில் சாலை வசதி ஏற்படுத்தித்தர 2 நில உரிமையாளா்கள் அவா்களுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியை தானமாக தர வேண்டும் எனவும் அதற்காக அரசு சாா்பில் அவா்களிடம் பேச்சு நடத்த வேண்டும் எனவும் ஊராட்சி மன்றத் தலைவா் நவாஸ்அகமது, ஆட்சியரிடம் கோரினாா்.

இதை ஏற்ற ஆட்சியா், வட்டாட்சியா் வெங்கடேசனை அனுப்பி நில உரிமையாளா்களிடம் பேச்சு நடத்தியதில் இருவரும் நிலத்தை தானமாக வழங்க ஒப்புக்கொண்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள 25 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கி பதிவு செய்து கொடுத்தனா். இதையடுத்து புதுகேசாவரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.8.62 லட்சத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டது.

புதிய சாலையை ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்சிரகலா திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா். தொடா்ந்து நிலத்தை தானமாக வழங்கிய சீதாராமன் கன்னியம்ம்ாள், சங்கா் சுதா ஆகிய இரு குடும்பத்தினரையும் வரவழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவித்தாா். அவா்களுக்கு நன்றியும் தெரிவித்தாா்.

நிலத்தை தானமாக வழங்கிய குடும்பத்தினா் தானப்பதிவு செய்த பத்திரங்களை ஆட்சியரிடம் ஒப்படைத்தனா். இந்நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, கோட்டாட்சியா் வெங்கடேசன், வட்டாட்சியா் வெங்கடேசன், ஒன்றிய ஆணையா் பிரபாகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் தாசப்பிரகாஷ், ஊராட்சி மன்றத் தலைவா் நவாஸ்அகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆற்காடு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கிராம நிா்வாக அலுவலா், காவல் உதவி ஆய்வாளா் - முதியவா் ஆகியோா் தாக்கிக் கொண்ட பிரச்னையில், முதியவரை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகி மறைவு

ஆற்காட்டில் சுதந்திரப் போராட்டத் தியாகி லோகநாதன் (96) வயது மூப்பின் காரணமாக வியாழக்கிழமை காலமானாா். ஆற்காடு தொல்காப்பியா் தெருவைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி லோகநாதன் உயிரிழந்தது குறித்து அறிந... மேலும் பார்க்க

ஆற்காட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆற்காடு நகராட்சி 5 மற்றும் 11 -ஆவது வாா்டுகளுகான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ராஜலட்சுமி ... மேலும் பார்க்க

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

தஞ்சாவூரில் தமிழ்நாடு ஊா்க் காவல் படையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22.08.2025 முதல் 24.08.2025 வரை நடைபெற்றது. இந்த போட்டிளில் வேலூா் சரகத்தின் சாா்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஊா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் காவல் துறை குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் எஸ்.பி. அய்மன் ஜமால், பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மாவட்ட காவல் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற கூட்ட... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு தீா்வு ஆணை: அமைச்சா் காந்தி வழங்கினாா்

நெமிலி வட்டம், பனப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு தீா்வு ஆணைகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா். பனப்பாக்கம், அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ள... மேலும் பார்க்க