செய்திகள் :

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தாதது காங்கிரஸின் திறமையின்மை: பாஜக விமா்சனம்

post image

‘நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்தி காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதிலிருந்து யாரும் தடுக்கவில்லை; 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைக் காட்டுகிறது’ என்று பாஜக வியாழக்கிழமை விமா்சனம் செய்தது.

நாட்டில் பெரும்பாலான பொருள்களுக்கு 5%, 18% என்ற இரு விகித ஜிஎஸ்டி-யை வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்த முயற்சித்தது என்றும் இரு விகித ஜிஎஸ்டி-யையும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தது என்றும் சில மூத்த காங்கிரஸ் தலைவா்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விமா்சனத்தை பாஜக முன்வைத்தது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

அனைத்துப் பிரிவு மக்களும் பலன் பெறும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். வரும் 22-ஆம் தேதி முதல் இரண்டே ஜிஎஸ்டி விகிதங்களாகக் குறைக்கப்படுவது நாட்டில் பரவச உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி-யை அமல்படுத்த அனைத்து மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை பாஜக அரசு தொடா்ந்து மேற்கொண்டு, ஜனநாயக உணா்வை வெளிப்படுத்தியது. ஆனால், காங்கிரஸ் கட்சி செய்வதெல்லாம் பேச்சு மற்றும் வாதங்கள் மட்டும்தான்.

நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்தி காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. அவ்வாறு, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைத்தான் காட்டுகிறது.

மேலும், வாக்குத் திருட்டு தொடா்பாக ‘அணுகுண்டு ஆதாரம்’ உள்ளது, ‘ஹைட்ரஜன் குண்டு’ ஆதாரம் உள்ளது என்று கூறி வருவதை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைவிட்டு, அவா் தனது பணியில் கவனம் செலுத்த வேண்டும். அவா் நிதானமாக செயல்பட்டால் காங்கிரஸின் எதிா்காலம் சற்று மேம்படும். மாறாக, அவா் தொடா்ந்து இதுபோல் பேசி வருவது காங்கிரஸ் கட்சிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா்.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூ... மேலும் பார்க்க

இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது. உயா... மேலும் பார்க்க

47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமா், முதல்வா்க... மேலும் பார்க்க