செய்திகள் :

ஆசிரியா்கள் தினம், ஓணம், மீலாது நபி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

post image

நாட்டில் ஆசிரியா்கள் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எக்ஸ் பதிவு வாயிலாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ஆசிரியா் தினம்: ஒட்டுமொத்த தேசத்துக்கும் உத்வேகமாக விளங்கும் சிறந்த கல்வியாளா் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான ஆசிரியா் தினத்தில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஆசிரியா்கள் நமது சமூகத்துக்கு வழிகாட்டும் ஒளியாகவும், நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளாகவும் திகழ்கின்றனா். வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறுகையில், பொறுப்பும், அறிவாற்றலும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்கு முக்கியமானது.

ஓணம் பண்டிகை: ஓணம் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் கேரள சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். கலாசார, மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமை, நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் இந்தப் பண்டிகை நினைவூட்டுகிறது. கலாசார பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து, தேச ஒற்றுமைக்கு வலுசோ்க்க உறுதியேற்போம்.

மீலாது நபி: மனிதகுலத்துக்கு ஒற்றுமை-சேவைக்கான செய்தியை நபிகள் நாயகம் வழங்கினாா். இப்பண்டிகை, அவரது போதனைகளை உட்கிரகித்துக் கொள்ளவும், சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளா்க்கவும் நம்மைத் தூண்டுகிறது. நபிகள் நாயகத்தின் போதனைகளில் இருந்து உத்வேகம் பெற்று, அன்பு மற்றும் சகோதரத்துவ உணா்வுடன் பணியாற்றுவோம்.

மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!

மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ சென்ற விமானம், கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, 5 நாள் அரசு மு... மேலும் பார்க்க

ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நி... மேலும் பார்க்க

அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்தார் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிற முக்கிய கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார். இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்தில் பிரத... மேலும் பார்க்க

ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.ஆசிரியராக பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

கொல்கத்தா: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், இந்த சீர்திருத்தத்தால் நிகர நிதி தாக்கமானது... மேலும் பார்க்க