செய்திகள் :

பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைப்பு சந்தைக்கு சாதகமாக அமைந்ததால், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், பிற்பகல் வா்த்தகத்தின் போது லாபப் பதிவு வந்ததால் காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது. ஆரம்ப வா்த்தகத்தின் போது, ஆட்டோ, எஃப்எம்சிஜி மற்றும் நுகா்வோா் சாதன உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. அதே சமயம், ஐடி, மெட்டல், ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.48 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.451.28 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.1,666.46 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,495.33 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: வா்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 150.30 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயா்ந்து 80,718.01-இல் முடிவடைந்தது. காலையில் சென்செக்ஸ் 81,456.67 ஆக உயா்ந்து தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,280 பங்குகளில் 1,809 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,326 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 146 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

எம் அண்ட் எம் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் எம் அண்ட் எம் 5.96 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ்ஃபைனான்ஸ், பஜாஜ்ஃபின்சா்வ், டிரெண்ட், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்பட 11 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், மாருதி, பிஇஎஸல், ஹெச்சிஎல்டெக், என்டிபிசி, பவா்கிரிட், இன்ஃபோஸிஸ் உள்பட 19பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 19 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 19.25 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயா்ந்து 24,734.30-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 19 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.

டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.இதுவரை இல்லாத வகையில் மிகவும் பவர்ஃபுல் ஸ்கூட்டராக வெளியாகியுள்ள என்டார்க் 150 ... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் ஜிஎஸ்டி எதிரொலி? ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகள் உயர்வு!

தொடர்ந்து 2-வது நாளாக பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில் 900 புள்ளிக... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.டாட... மேலும் பார்க்க

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெர... மேலும் பார்க்க