செய்திகள் :

டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்!

post image

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுவரை இல்லாத வகையில் மிகவும் பவர்ஃபுல் ஸ்கூட்டராக வெளியாகியுள்ள என்டார்க் 150 இன் விலை, வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்ததைவிட சற்று குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வேரியண்ட்டாக வெளியாகி இருக்கும் என்டார்க் 150 ஸ்கூட்டரின் என்ஜின் 149.7 சிசி, சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஏர் கூலண்ட்டுடன் சந்தைக்கு வந்துள்ளது.

இதன் என்ஜினானது, 7,000 ஆர்பிஎம்மில் மணிக்கு 13 குதிரைத் திறனும், 5,500 ஆர்பிஎம்மில் 14.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சிவிடி ஆட்டோமெடிக் கியர் பாக்ஸும் இணைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 104 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்றும், 6.3 நொடிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் எனவும் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருக்கைக்கு அடியில் 12 லிட்டர் சேமிப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் முகப்புப் பக்க விளக்குகள் காண்பவர்களை ஈர்க்கும் வகையில் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலான என்டார்க் 125 ஸ்கூட்டரை ஒப்பிடும்போது டிசைனில் பல மாற்றங்களை டிவிஎஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

என்டார்க் 150 ஸ்கூட்டரில் டிஎஃப்டி டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேரியண்ட்டில், மியூசிக் கண்ட்ரோல், நேவிகேஷன், 4 ஜி சிம் கனெக்டிவிட்டி, ஸ்மார்ட் வாட்ச் இண்டகிரேஷன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ப்ளூடூத் மூலம் டிஸ்பிளே வழியாக அழைப்பை எடுக்கவும் துண்டிக்கவும் முடியும்.

டர்போ ப்ளூ, ஸ்டெல்த் சில்வர், ரேசிங் ரெட் மற்றும் நைட்ரோ கிரீன் ஆகிய நான்கு நிறங்களில் என்டார்க் 150 விற்பனைக்கு வந்துள்ளது.

என்டார்க் 150 ஸ்கூட்டரின் எக்ஸ் சோரூம் விலை ரூ. 1.19 லட்சமாகவும், என்டார்க் 150 டிஎஃப்டி-யின் விலை ரூ. 1.29 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVS Ntorq 150 scooter launched

இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறைப்பு: 5%, 18%-ஆக வரி குறையும் பொருள்கள் என்னென்ன?

பங்குச் சந்தையில் ஜிஎஸ்டி எதிரொலி? ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகள் உயர்வு!

தொடர்ந்து 2-வது நாளாக பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில் 900 புள்ளிக... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.டாட... மேலும் பார்க்க

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் ஆகிய காரணங்களால், இன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூ... மேலும் பார்க்க