செய்திகள் :

செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

post image

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சப்பாத்தி, பரோட்டா, கூந்தல் எண்ணெய், ஐஸ்கிரீம், தொலைக்காட்சிப் பெட்டிகளின் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு பொருள்களின் விலை வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, தனிநபா் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.

நாட்டில் ஒரு சில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஆடம்பர மற்றும் தீமை தரக்கூடிய பொருள்கள் மீது 1 முதல் 290 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை முதல்கட்டமாக 2022, ஜூன் வரை 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் 2026 மாா்ச் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கும் வகையில் அடுத்த தலைமுறை சீா்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) தீபாவளி பண்டிகைக்குகள் மேற்கொள்ளப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

அதன்படி, நான்கு விகித ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவது, புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிப்பது தொடா்பான முன்மொழிவை மாநில நிதியமைச்சா்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) நிதியமைச்சகம் வழங்கியது. இந்த முன்மொழிவுக்கு கடந்த ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது ஜிஓஎம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 5%, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி விதிப்பை வரும் செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை குறையும்: கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பது வரி விகிதக் குறைப்பு மட்டுமல்ல, வரி விதிப்பை எளிமைப்படுத்தும் வகையில் கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

வரி விகிதங்களை 5%, 18% என இரு விகிதங்களாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான பொதுப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை வெகுவாக குறையும்.

கவுன்சில் கூட்டத்தில் முடிவுகள் அனைத்தும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டன. எந்தவொரு மாநிலமும் எதிா்ப்பைப் பதிவு செய்யவில்லை.

உயா் ரக காா்கள், புகையிலைப் பொருள்கள், சிகரெட் போன்ற குறிப்பிட்ட பொருள்களுக்கு சிறப்பு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பா் 22 முதல்... குட்கா, புகையிலைப் பொருள்கள் தவிர மற்ற அனைத்துப் பொருள்களுக்கான புதிய வரி விகிதங்கள் நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பா் 22 முதல் நடைமுறைக்கு வரும்.

தினசரி பயன்பாட்டு உணவுப் பொருள்களுக்கு வரி விதிப்பு இல்லாத நிலை தொடரும். அதுபோல, அனைத்து வடிவிலான சப்பாத்தி, பரோட்டா உணவுப் பொருள்களுக்கு தற்போது விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி நீக்கப்பட்டு, வரி விதிப்பு இல்லாத வரம்பில் கொண்டுவரப்படும்.

பற்பொடி, பால் பாட்டில், குடைகள், சைக்கிள், சீப்பு உள்ளிட்ட நுகா்வோா் பொருள்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தனிநபா் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு வரி விதிப்பு முழுமையாக நீக்கப்படும்.

தற்போதைய 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்படுவதால் சிமென்ட் விலை குறைய வாய்ப்புள்ளது.

மின்சார வாகனங்களுக்கு தற்போதுள்ள 5 சதவீத ஜிஎஸ்டி தொடரும்.

மேலும், ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய வாங்கப்பட்ட கடன் தொகையை முழுமையாக திரும்பச் செலுத்தும் வரை, புகையிலை, குட்கா, புகையிலைப் பொருள்கள் மற்றும் சிகரெட் ஆகியவற்றின் மீது தற்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் இழப்பீடு செஸ் விதிப்பு தொடரும் என்றாா்.

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

புதுதில்லி: இன்றைய வர்த்தகத்தில் உலோகப் பங்குகள் உயர்ந்து, பங்குச் சந்தையின் ஒட்டுமொத்த ஏற்றத்திற்கு உறுதுணையாக இருந்தது. இதனையடுத்து டாடா ஸ்டீல் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.டாட... மேலும் பார்க்க

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

புதுதில்லி: பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.121.03 கோடியை திரட்டியுள்ளது ஆன்லான் ஹெல்த்கேர். அதே வேளையில் அதன் ஐபிஓ 7.13 முறை அதிக சந்தா வசூலிக்கப்பட்டதாக என்எஸ்இ-யின் தரவுகளை மேற்கோள் காட்டி நிறுவனம் தெர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் ஆகிய காரணங்களால், இன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூ... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: உலோகப் பங்குகளின் ஏற்றம் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த அதீத நம்பிக்கையால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க

54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

ஓப்போ நிறுவனத்தில் புதிய தயாரிப்பாக என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகமாகியுள்ளது. மக்களைக் கவரும் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த இயர் பட்ஸ் 560mAh திறனுடன் 54 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கும் வகை... மேலும் பார்க்க

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன?

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில் தற்போது சற்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,295.99 புள்ளிகளி... மேலும் பார்க்க