செய்திகள் :

54 மணிநேரம் தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஓப்போ என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகம்!

post image

ஓப்போ நிறுவனத்தில் புதிய தயாரிப்பாக என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் அறிமுகமாகியுள்ளது.

மக்களைக் கவரும் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த இயர் பட்ஸ் 560mAh திறனுடன் 54 மணிநேரம் தொடர்ந்து பாடல்களைக் கேட்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஓப்போ நிறுவனத்தின் தயாரிப்புகள், இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளன. இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான அம்சங்களுடன் மின்னணு சாதனங்களை தயாரித்து வருகிறது.

தற்போது புதிதாக என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • என்கோ 3 ப்ரோ இயர் பட்ஸ் 560mAh பேட்டரி திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக 54 மணிநேரங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

  • ஒவ்வொரு (இடது / வலது) கருவியும் தனித்தனியாக 58mAh பேட்டரிகளைக் கொண்டுள்ளதால், தனித்தனியாக தொடர்ந்து 12 மணிநேரத்துக்கு பயன்படுத்தலாம்.

  • சார்ஜிங் அம்சம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 4 மணிநேரத்திற்கு பயன்படுத்தலாம்.

  • ட்ரூ வையர்லெஸ் ஸ்டீரியோவால், பேட்டரிகள் தரச் சான்றிதழ் பெற்றுள்ளன.

  • புளூடூத் 5.4 அம்சத்தின் மூலம் வேகமாக சாதனங்களுடன் இணைத்துக்கொள்ள முடியும்.

  • இயர் பட்ஸில் தொடுதிறன் மூலம் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்புகளை ஏற்பது / துண்டிப்பது, பாடல்களை மாற்றுவது என தொடுதிறன் மூலம் செய்துகொள்ளலாம்.

  • வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன.

  • இதன் விலை ரூ. 1,799. சில வங்கி கடன் அட்டைகளுக்கு ரூ.200 தள்ளுபடி உண்டு.

இதையும் படிக்க | ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ. 2,500 வரை விலை குறைய வாய்ப்பு!!

OPPO Enco Buds 3 Pro Launched in India: Price and Specs

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் ஆகிய காரணங்களால், இன்றைய டாலருக்கு நிகரான இந்திய ரூ... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் தொடங்கி உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: உலோகப் பங்குகளின் ஏற்றம் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்த அதீத நம்பிக்கையால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் என்ன?

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில் தற்போது சற்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,295.99 புள்ளிகளி... மேலும் பார்க்க

யுபிஐ மூலம் ஜிஎஸ்டி: ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி வசதி

ஒருங்கிணைந்த பணப்ரிமாற்ற முறை (யுபிஐ), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), வங்கிக் கணக்கு அட்டை (டெபிட் காா்டு), இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளா்கள் மற்றும் வாடிக்கையாளா் அல்லாதவா்கள் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

கொழும்பு: இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு!

மும்பை: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக... மேலும் பார்க்க