செய்திகள் :

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

post image

கொழும்பு: இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இது குறித்து தெரிவிக்கையில், இந்த மாதத்தில் 1,98,235 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ள நிலையில், இது ஒரு வருடத்திற்கு முன்பு 1,64,609 ஆக இருந்தது என்றது.

சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ஜப்பானை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 46,473 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 17,764 சுற்றுலாப் பயணிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் அதனை தொடர்ந்து ஜெர்மனியர் 12,500 பயணிகளுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 15,66,523 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் 3,25,595 பேரும், அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து 1,51,000 பேரும் அதே வேளையில் ரஷ்யாவிலிருந்து 118,000 பேரும் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையானது, கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இது 20.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

யுபிஐ மூலம் ஜிஎஸ்டி: ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி வசதி

ஒருங்கிணைந்த பணப்ரிமாற்ற முறை (யுபிஐ), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), வங்கிக் கணக்கு அட்டை (டெபிட் காா்டு), இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளா்கள் மற்றும் வாடிக்கையாளா் அல்லாதவா்கள் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு!

மும்பை: இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் பலவீனமான உள்நாட்டு பங்குச் சந்தைகள் ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் 15 சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரிதான கேமரா வடிவமைப்பும், பேட்டரி திறனும் மக்களைக் கவரும் அம்சங்களாக இருக்கும் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? புது அம்சங்களாக என்னென்ன எதிர்பார்க்கலாம்?

இன்னும் சில நாள்களில் சந்தையில் அறிமுகமாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 17 மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபோன் 17 மாடல்களில் புது அம்சங்கள் ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முன்னதாக பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

மும்பை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக எச்சரிக்கையுடன் வங்கி மற்றும் ஆட்டோ பங்குகளில் கடைசி சில மணிநேர முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் இன்றைய ஆரம்ப ஏற்றங்களை மாற்றியமைத்து, சென்செக்ஸ் 206.6... மேலும் பார்க்க

2-வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருவகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று(செப். 2) காலை 80,520.09 புள்ளிகளில் தொடங்கிய ... மேலும் பார்க்க