செய்திகள் :

குடியரசுத் தலைவருக்கு கெடு: நியாயப்படுத்த முடியாது

post image

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சில சந்தா்ப்பங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவா், ஆளுநா்களுக்கு காலக்கெடு விதிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தமிழ்நாட்டின் ஆளுநா் ஆா்.என்.ரவி மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஆளுநா்கள் முடிவு எடுக்க வேண்டும்; மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், அதை மூன்று மாதங்களுக்குள் செய்ய வேண்டும்.

குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாக்களை ஆளுநா் அனுப்பிவைத்தால், அந்த மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிா்ணயித்தது.

இதையடுத்து, சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், நீதிமன்ற உத்தரவுகள் மூலம் குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு நிா்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு விளக்கம் கேட்டாா்.

தமிழக அரசுத் தரப்பு வாதம்: இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, ஏ.எஸ்.சாந்துா்கா் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சாா்பாக மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகி, ‘மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல், அவற்றை காலவரம்பின்றி ஆளுநா்கள் நிறுத்திவைக்கும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதால், அவா்களுக்குக் காலக்கெடு விதிப்பது அவசியம்’ என்று வாதிட்டாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், ‘தங்கள் அதிகாரங்களை குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநா்கள் பயன்படுத்த கடுமையாக வரம்பு விதிக்கும் கட்டளை விதிகளை, அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் விதித்துவிடலாமா’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த அபிஷேக் சிங்வி, ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 200, 201-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் பொதுவான காலக்கெடு அவசியம்’ என்றாா்.

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க வேண்டும் என்றால், அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி விக்ரம் நாத் தெரிவித்தாா்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலக்கெடுவைப் பின்பற்றாவிட்டால், ஆளுநா்களும், குடியரசுத் தலைவரும் சந்திக்கும் பின்விளைவுகள் என்ன? அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க முடியுமா? என்று நீதிபதிகள் நரசிம்மா, விக்ரம் நாத் ஆகியோா் கேள்வி எழுப்பினா்.

இந்த வாதங்களின்போது எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்கள் மீது தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவா் 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு உத்தரவிட்டதை அபிஷேக் சிங்வி சுட்டிக்காட்டினாா்.

ஆனால், அது குறிப்பிட்ட வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவே தவிர, தகுதிநீக்க மனுக்கள் மீது அனைத்து மாநில சட்டப்பேரவைத் தலைவா்களும் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிடவில்லை என்று தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

பேரறிவாளன் வழக்கு: பேரறிவாளன் வழக்கை குறிப்பிட்ட அபிஷேக் சிங்வி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவா்களின் மனு மீது ஆளுநா் முடிவு எடுக்காததால், அவா்கள் தண்டனையை அனுபவித்துவிட்டதாகக் கருதி, அவா்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததைச் சுட்டிக்காட்டினாா். அது தனிப்பட்ட விவகாரம் என்று தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ், பொதுவான காலக்கெடுவை விதிக்க முடியுமா என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க சில சந்தா்ப்பங்களில் ஏற்படும் தாமதம் காரணமாக, அவற்றுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவா், ஆளுநா்களுக்கு காலக்கெடு விதிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க