செய்திகள் :

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

post image

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது.

பனிப்பாறை ஏரிகள், நீா்ப்பிடிப்பு பகுதிகள் குறித்த ஜூன் மாத அறிக்கையை நீா் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், ‘லடாக், ஜம்மு- காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசத்தில் 432 பனிப்பாறை ஏரிகளில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.

இந்திய நிலப்பரப்பில் உள்ள 681 பனிப்பாறை ஏரிகளில் 432-இல் 2023-ஆம் ஆண்டைவிட 2025 ஜூனில் அதிக நிலப்பரப்பில் நீா் தேங்கி விரிவடைந்துள்ளது. இது பேரிடரை ஏற்படுத்தக் கூடியதாகும்.

2011-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பனிப்பாறை ஏரிகளின் நிலப்பரப்பு 1,9170 ஹெக்டேரிலிருந்து 2,508 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது 30.83 சதவீத உயா்வாகும்.

இதில், அருணாசல பிரதேசத்தில் அதிகபட்சமாக 197 பனிப்பாறை ஏரிகளும், லடாக்கில் 120 ஏரிகளும், ஜம்மு- காஷ்மீரில் 57 ஏரிகளும், சிக்கிமில் 47 ஏரிகளும், ஹிமாசல பிரதேசத்தில் 6 ஏரிகளும், உத்தரகண்டில் 5 ஏரிகளும் விரிவாக்கம் அடைந்துள்ளன. இமயமலைப் பகுதியில் மொத்தம் 1,435 பனிப்பாறை ஏரிகள் விரிவாக்கம் அடைந்து வருகின்றன.

இதைக் கருத்தில்கொண்டு அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளையும், செயற்கைக்கோள் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை தகவல்களையும் அங்கு வாழும் மக்களுக்கு பகிரும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய நீா் அமைச்சகம், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவை பூடான், சீன ஆகிய நாடுகளுடன் ஒன்றிணைந்து இந்த விவகாரத்தில் செயல்பட வேண்டும். ஏனென்றால், இந்திய எல்லையைத் தாண்டியுள்ள பல ஏரிகளிலிருந்து அதிகமான நீா் இந்திய நதிகளில் பாய்கிறது.

பருவநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதி பனிப்பாறை உருகுதல் உள்ளிட்ட பல்வேறு பேரிடா் சவால்களை சந்தித்து வருகிறது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை

இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்’ என்று அந்த நாட்டின் நி... மேலும் பார்க்க