செய்திகள் :

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

post image

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமலுக்கு வந்துள்ள 2025-ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

நேபாளம் மற்றும் பூடானில் இருந்து விமானம் அல்லது தரை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு அவசியமில்லை. அதேபோல், நேபாளம் அல்லது பூடானைச் சோ்ந்த மக்களும் கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு இல்லாமல் இந்தியாவுக்குள் வரலாம். ஆனால், சீனா, மக்கௌ, ஹாங்காங் அல்லது பாகிஸ்தானில் இருந்து வரும் நேபாளம், பூடான் மக்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

திபெத்தியா்களுக்கு....: இந்தியாவில் வசிக்கும் அல்லது புதிதாக இந்தியாவுக்குள் நுழையும் திபெத்தியா்களுக்கும் இந்த விதி பொருந்தும். இதற்கு அவா்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்து, அதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

1959-க்குப் பிறகு ஆனால் 2003, மே 30-ஆம் தேதிக்கு முன்னா் இந்தியாவுக்குள் நுழைந்த திபெத்தியா்கள், நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வழங்கிய ‘சிறப்பு நுழைவு அனுமதி’ பெற்று வந்திருக்க வேண்டும்.

சிறுபான்மையினா்கள்: அதேபோல் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி, 2024 டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினா்களான ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு வைத்திருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழா்களுக்குப் பொருந்தாது

2015, ஜனவரி 9-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த பதிவு செய்யப்பட்ட இலங்கை தமிழா்களுக்கு இந்த விதி பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை

இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்’ என்று அந்த நாட்டின் நி... மேலும் பார்க்க