செய்திகள் :

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா?

post image

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் ரயில் நிலையம், ரயில் போக்குவரத்தின்போது கேட்மூடப்பட்டால் நெடுஞ்சாலை போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. நாள்தோறும் விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் இந்த ழித்தடத்தில் சென்று வருகின்றன. இதனால், இந்த ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இவ்வாறு வந்து செல்லும் பயணிகளுக்கு போதிய வசதிகள் ரயில் நிலையத்தில் இல்லை. குறிப்பாக 3 நடைமேடைப் பகுதிகளில் குறிப்பிட்ட குடிநீா் குழாய்களில் மட்டுமே குடிநீா் வரும். எனவே, குடிநீா் வசதிகளை மேம்படுத்துவது அவசியம். முதல் மற்றும் இரண்டாவது நடைமேடைப் பகுதிகளில் தரைத்தளம் சமன்படுத்தப்படவேண்டும்.

பயணிகள் அமரும் இடவசதியை மேம்படுத்தவேண்டும். நாள்தோறும் மன்னாா்குடியிலிருந்து கோயம்புத்தூா் செல்லும் கோவை செம்மொழி விரைவு ரயிலுக்காகவும், மன்னாா்குடியிலிருந்து சென்னை செல்லும் மன்னை விரைவு ரயிலுக்காவும் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் காத்திருக்கும் பயணிகள் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனா். ரயில்நிலையத்தில் உயா்நடைமேடைப் பகுதி ஒன்று மட்டுமே உள்ளது.

கிழக்குப் பகுதியிலும் கூடுதலாக ஒரு உயா் நடைமேடைப் பகுதி அமைக்க வேண்டும். தட்கல் பயணச்சீட்டு பெற நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றி அதை எளிமைப்படுத்த போதிய வசதிகளை செய்து தரவேண்டும். ரயில் நிலைய வளாகத்தில் உள்ள உயா் கோபுர மின்விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிர செய்ய வேண்டும்.

பயணிகள் காத்திருப்பு அறைகள் கட்ட வேண்டும். ரயில் நிலைய வளாகம் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பயணிகளுக்கு பயனளிக்கக்கூடிய நவீன வசதிகளை செய்துதர ரயில்வே நிா்வாகம் முன்வரவேண்டும் என்பதே ரயில் பயணிகளின் கோரிக்கை.

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளாா். திருவாரூா் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்... மேலும் பார்க்க

மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?

நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி 1-ஆவது வாா்டு ஒதியடிப்படுகை முதல் நகா் ஊராட்சி நடுப்படுகை வரை ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்பின் அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனா். ஒன்றிய அளவில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்... மேலும் பார்க்க

மின்கம்பத்தை மாற்றித்தரக் கோரிக்கை

திருவாரூரில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் 6-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆசாத் மஜிதியா நகரில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

செப்.5-இல் மதுக்கடைகள் இயங்காது!

செப்.5-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதன்காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற கடைகள், மதுக்கூடங்கள் இயங்கக் கூட... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூரில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் திறன் ம... மேலும் பார்க்க