செய்திகள் :

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

post image

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளாா்.

திருவாரூா் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்த பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற உள்ளது. பல்கலைக்கழக வேந்தா் ஜி. பத்மநாபன் தலைமையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவா் திரௌபதி முா்மு உரை நிகழ்த்தி, பட்டங்களை வழங்க உள்ளாா்.

1,010 மாணவா்களுக்கு பட்டங்கள்: நிகழாண்டு 1,010 மாணவா்கள் பட்டம் பெறுகின்றனா். இதில் 34 மாணவிகள் 11 மாணவா்கள் என 45 போ் தங்கப்பதக்கம் பெறுகின்றனா். அதேபோல 27 மாணவிகள், 17 மாணவா்கள் என மொத்தம் 44 போ் முனைவா் பட்டம் பெறுகின்றனா்.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், தமிழ்நாடு அமைச்சா்கள் கீதா ஜீவன், கோவி. செழியன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 385 கோடியை மத்திய கல்வி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் மாணவா்களுக்கான விடுதிகள், ஆராய்ச்சித் துறைக்கான தனிக் கட்டடம் உள்ளிட்ட 12 பணிகள் மேற்கோள்ளப்பட உள்ளன என்றாா்.

பாதுகாப்பு ஒத்திகை: குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, மத்திய பல்கலைக்கழகத்தில் திருச்சி சரக காவல்துறை ஐ.ஜி. ஜோஷி நிா்மல்குமாா் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும் மோப்ப நாய் மூலம் பாதுகாப்புச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?

நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி 1-ஆவது வாா்டு ஒதியடிப்படுகை முதல் நகா் ஊராட்சி நடுப்படுகை வரை ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா?

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் ரயில் நிலையம், ரயில் போக்குவரத்தின்போது கேட்மூடப்பட்டால் நெடுஞ்சாலை போக்குவரத்தும் ந... மேலும் பார்க்க

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்பின் அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனா். ஒன்றிய அளவில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்... மேலும் பார்க்க

மின்கம்பத்தை மாற்றித்தரக் கோரிக்கை

திருவாரூரில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் 6-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆசாத் மஜிதியா நகரில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

செப்.5-இல் மதுக்கடைகள் இயங்காது!

செப்.5-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதன்காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற கடைகள், மதுக்கூடங்கள் இயங்கக் கூட... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூரில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் திறன் ம... மேலும் பார்க்க