செய்திகள் :

சென்னை: வடிகால் தொட்டியில் விழுந்த பெண்; சடலமாக மீட்ட காவல்துறை - என்ன நடந்தது?

post image

சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, வீரபத்திரன் கோயில் தெருவில் உள்ள ஒரு வண்டல் சேகரிப்பு தொட்டியில் (silt catch pit) பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று காலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அதில், ``உயிரிழந்தவர் பெயர் தீபா (41). கணவனை இழந்த இவர், கோடம்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், நேற்று அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரவு நேரத்தில் அந்தப் பெண் மரப்பலகையால் மூடப்பட்டிருந்த தொட்டியின் மீது நடந்து சென்றுள்ளார்.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

அப்போது பலகை உடைந்ததால் அவர் பள்ளத்தில் விழுந்துள்ளார். பள்ளத்தில் விழுந்ததில் அவரது தலை மற்றும் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக யாரும் கவனிக்காததால், அவர் பள்ளத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இது ஒரு விபத்து என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என்றது.

இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் மக்கள், 'மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் மாநகராட்சியின் பொறுப்பற்ற தன்மையே இந்த விபத்துக்குக் காரணம். பல இடங்களில் வடிகால் தொட்டிகள் மூடப்படாமல் அல்லது பலவீனமான பலகைகளால் மூடப்பட்டிருக்கிறது. இது பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது." என்றனர்.

சென்னை மாநகர துணை மேயர் மகேஷ்குமார், ``மழைநீர் வடிகால் பள்ளத்தில் இருந்து அந்த பெண் மீட்கப்படவில்லை. அருகே உள்ள வண்டல் மண் சேரும் தொட்டியில் இருந்து தான் மீட்கப்பட்டு உள்ளார். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் பணிகளே நடக்கும். இதன் காரணமாக அந்த பகுதியில் அந்த பெண் அதில் விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை” இவ்வாறு அவர் கூறினார் .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த அவலமானது இந்தூரில் உள்ள மாந... மேலும் பார்க்க

"விடுவிக்கப்படும் வரை சிறையிலிருப்பதே நல்லது" - எதிர்க்கும் அரசு; உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பின்னர், இந்தக் ... மேலும் பார்க்க

நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்லூரி மாணவிகள்

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் 'பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என வருந்துகிறார்கள் நெல்லை கல்... மேலும் பார்க்க

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவுபாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.சந்திரபாபு நாயுடு, முதன்முத... மேலும் பார்க்க

Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான ம... மேலும் பார்க்க