செய்திகள் :

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம்

post image

மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அவலமானது இந்தூரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான மகாராஜா யஷ்வந்த்ராவ் சிகிச்சாலயா-வில் (MYH) நடந்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரைக் கடந்த வாரம் பிறந்த குழந்தைகள், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதையடுத்து, ஞாயிறு மற்றும் திங்களன்று குழந்தைகளை எலி கடித்திருக்கின்றன.

பின்னர், காயமடைந்த பச்சிளம் பிறந்த குழந்தைகளைப் பார்த்த மருத்துவமனையின் நர்சிங் குழு, உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகவல் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது, அந்தப் பச்சிளம் குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த தொட்டில் பக்கம் எலி ஓடுவது பதிவாகியிருக்கிறது.

இது குறித்து நேற்று பேசிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் யாதவ், "கடந்த 48 மணி நேரத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு குழந்தையின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டையிலும் எலிகள் கடித்துள்ளன.

குழந்தைகள் தற்போது பாதுகாப்பாகவும், தொடர்ச்சியான பராமரிப்பிலும் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் கடைசியாக பூச்சி கட்டுப்பாடு (pest control) மேற்கொள்ளப்பட்டது. விரைவில் மருத்துவமனை முழுவதிலும் மீண்டும் அது மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

அதேபோல், மூத்த மருத்துவர் பிரஜேஷ் லஹோட்டி, "மருத்துவமனையில் எலிகள் அதிக அளவில் உள்ளன. ஊழியர்கள் விழிப்புடன் இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.

மீண்டும் இதுபோன்று நடப்பதைத் தடுக்க பெரிய அளவிலான பூச்சி கட்டுப்பாட்டுத் திட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

எலி
எலி

மறுபக்கம், இந்தச் சம்பவத்தால் ஆளும் பா.ஜ.க அரசை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அமித் சௌராசியா, "மத்தியப் பிரதேசத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பாக இல்லை.

இந்தச் சம்பவமானது பா.ஜ.க அரசின் கீழ் பொதுச் சுகாதார உள்கட்டமைப்பு மோசமாக இருப்பதைக் காட்டுகிறது" என்று விமர்சித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் இவ்வாறு நடப்பது இதுவொன்றும் முதல்முறையல்ல. கடந்த ஜனவரியில் சாகர் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு உடல்களின் கண்களை எலிகள் கடித்தன.

மே மாதம், விதிஷா மாவட்ட மருத்துவமனையில் விபத்தில் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவரின் மூக்கு மற்றும் கையை எலிகள் கடித்தன.

ஜூன் மாதம் போபாலின் ஹமீடியா மருத்துவமனையில் 50 வயதுடைய ஒருவரின் உடலை எலி கடித்தது எனப் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"விடுவிக்கப்படும் வரை சிறையிலிருப்பதே நல்லது" - எதிர்க்கும் அரசு; உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பின்னர், இந்தக் ... மேலும் பார்க்க

நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்லூரி மாணவிகள்

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் 'பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என வருந்துகிறார்கள் நெல்லை கல்... மேலும் பார்க்க

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவுபாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை ... மேலும் பார்க்க

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.சந்திரபாபு நாயுடு, முதன்முத... மேலும் பார்க்க

Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான ம... மேலும் பார்க்க

பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம் ஈர்க்க காரணம் என்ன?

சமீபத்திய SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஹோங்க்சி L5 மாடல் காரில் பயணம் செய்தது பேசுபொருளாகி கவனம் ஈர்த்துள்ளது.இந்தக் கார் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் உயர்மட்ட த... மேலும் பார்க்க