செய்திகள் :

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

post image

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார். 

சந்திரபாபு நாயுடு, முதன்முதலாக 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆந்திர மாநில முதல்வராகப் பதவியேற்று இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று தசாப்தங்களில், அவர் மூன்று முறை ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இதையொட்டி அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியிருந்த சந்​திர​பாபு நாயுடு, "நான் என்றைக்காவது விடுப்பு எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா, உடம்பு சரியில்லாமல் ஓய்வெடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? மக்களுக்காகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் வருவாயை அதிகரிக்கவும் இயந்திரத்தைப் போல ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

சந்​திர​பாபு நாயுடுவின் மனைவியான புவவேஷ்வரி, "பக்தியுடனும், மக்கள் நலனுடனும் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. நீங்கள் எடுத்துள்ள ஒவ்வொரு அடியும், எடுத்த ஒவ்வொரு முடிவும் மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டிற்குச் சான்றாகும்.

மனைவியுடன் சந்திரபாபு நாயுடு
மனைவியுடன் சந்திரபாபு நாயுடு

இந்த அரிய மைல்கல்லை எட்டியதற்கு நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன். உங்கள் தொலைநோக்கு பார்வையுடனும், உறுதியுடனும் எப்போதும் உங்களுடன் நிற்பது எனது அதிர்ஷ்டம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவுபாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை ... மேலும் பார்க்க

Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான ம... மேலும் பார்க்க

பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம் ஈர்க்க காரணம் என்ன?

சமீபத்திய SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஹோங்க்சி L5 மாடல் காரில் பயணம் செய்தது பேசுபொருளாகி கவனம் ஈர்த்துள்ளது.இந்தக் கார் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் உயர்மட்ட த... மேலும் பார்க்க

TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்!

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள... மேலும் பார்க்க

`விவசாயிகளை பாதிக்கும் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காது'- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சேத்தூர் பேரூராட்சியில் 22 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் வாழ வந்தான் கண்மாய் அருகில் 12 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பிராகுடி ஆற்றுப் பாதையில் 12 ஆழ்துளை கிணறு என ... மேலும் பார்க்க

விருதுநகர்: `ஊதிய உயர்வு; பணிச்சுமை'- அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் வேலைப் புறக்கணிப்பு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினசரி 2000 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் மருத்துவமனையில் 1200 படுக்கையுடன் செயல்படும் உள் நோயாளிகள் பிரிவில் ஆயிரம் பேர் சிகிச... மேலும் பார்க்க