செய்திகள் :

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

post image

கச்சத்தீவு

பாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.

இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை விவகாரம் இந்தியா–இலங்கை இடையே நீடித்தது. 28.06.1974 அன்று இந்தியா - இலங்கை கடல்சார் எல்லை உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி காங்கிரஸ் ஆட்சியில் கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது.

தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்த கச்சத்தீவை மீட்க வேண்டும், மீண்டும் இந்தியா அதை தன் வசப்படுத்த வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

இதற்கிடையில், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்படுத்தப்படுதல், துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்ததால், 'கச்சத்தீவை மீட்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்தது.

இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாத சட்டமன்ற கூட்டத்தில்,
"தமிழ்நாடு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுகாணவும், கச்சத்தீவை மீட்பதற்காக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் விரும்புகிறது" எனப் பேசினார்.

தமிழக சட்டமன்றத்தில் நெடுநாள் பிரச்சனையான கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சரின் தனித் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு பயணம்

இந்நிலையில், இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்கே, நெடுந்தீவில் இருந்து கடற்படை ரோந்து கப்பல் மூலம் இந்தியா–இலங்கை இடையே நடுக்கடலில் உள்ள கச்சத்தீவை பார்வையிட்டு, கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு குறித்து பேசியிருக்கிறார்.

இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவைப் பார்வையிட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக கவனிக்கப்படுகிறது.

இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டதில்லை. ஆனால் தற்போது இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசாநாயக்கே கச்சத்தீவைப் பார்வையிட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றதாகக் கவனிக்கப்படுகிறது.

மேலும் இதுகுறித்து பேசியிருக்கும் இலங்கை அதிபர் அனுரகுமார,

"கச்சத்தீவை மையப்படுத்தி சில பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. கச்சத்தீவு எங்கள் பூமி, என் மக்களுக்கு சொந்தமானது. அந்த நிலப்பரப்பும், அந்த வான்பரப்பும் எமது மக்களுக்குச் சொந்தமானது. அதை யாரும் கைப்பற்ற முடியாது. அதை அடிமைப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்.

நாட்டில் எந்தவொரு இடத்திலேயே பிறந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்தக் கலாச்சாரத்தினுள் வாழ்ந்தாலும், அந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்த அரசாங்கத்தின் கடமை" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"விடுவிக்கப்படும் வரை சிறையிலிருப்பதே நல்லது" - எதிர்க்கும் அரசு; உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பின்னர், இந்தக் ... மேலும் பார்க்க

நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்லூரி மாணவிகள்

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் 'பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என வருந்துகிறார்கள் நெல்லை கல்... மேலும் பார்க்க

ஆந்திரா: "இயந்திரத்தைப் போல் ஓய்வில்லாமல் உழைக்கிறேன்" - அரசியல் வாழ்க்கை குறித்து சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக இருக்கும் சந்​திர​பாபு நாயுடு (75) தெலுங்கு தேசம் கட்​சி​யின் தலை​வ​ராக அக்கட்சியின் தொண்டர்களால் ஒரு​மன​தாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.சந்திரபாபு நாயுடு, முதன்முத... மேலும் பார்க்க

Stalin: "இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான ம... மேலும் பார்க்க

பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்ற கார்; ஹோங்க்சி L5; 1966 டிசைன் -கவனம் ஈர்க்க காரணம் என்ன?

சமீபத்திய SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஹோங்க்சி L5 மாடல் காரில் பயணம் செய்தது பேசுபொருளாகி கவனம் ஈர்த்துள்ளது.இந்தக் கார் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் உயர்மட்ட த... மேலும் பார்க்க

TNPSC: "சாமித்தோப்பு அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா..?" - பாமக அன்புமணி காட்டம்!

இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில், அய்யா வைகுண்ட சுவாமிகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்வி கேட்கப்பட்டுள... மேலும் பார்க்க