செய்திகள் :

ஜம்முவிலிருந்து பழங்கள் எடுத்துச் செல்வது கடுமையாக பாதிப்பு: ‘சரக்கு ரயில் சேவை அவசியம்!’ -மெஹபூபா முஃப்தி

post image

ஜம்மு - காஷ்மீரில் மழைக்காலத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அங்கிருந்து பழங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதில் தாமதமும் அதனால் மேற்கண்ட உணவுப் பொருள்கள் கெட்டு வீணாவதும் தொடர்கதையாகி வருகிறது.

கனமழையால் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளதால், காஷ்மீர் பழ வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். கோடிக்கணக்கான ஆப்பிள் மற்றும் பேரிக்காய்களை ஏற்றிச்சென்ற 1,000-க்கும் மேற்பட்ட லாரிகள் சிக்கித்தவிக்கின்றன.

இதனையடுத்து, இந்தப் பிரச்சினைக்கான சிறந்ததொரு தீர்வாக ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவை தேவை என்று ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று(செப். 2) தெரிவித்திருப்பதாவது: “ஜம்மு - காஷ்மீரில் நெடுஞ்சாலைகளில் ஏராளமான பழங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாலும், பழ மண்டிகளிலும் பதப்படுத்துமிடங்களிலும் இடப்பற்றாக்குறை காரணமாகவும் பழங்கள் விளைவிக்கும் விவசாயிகள் பெரும் பிரச்சைனையை எதிர்கொள்கிறார்கள்.

இத்தகைய சூழலில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவை தேவைப்படுகிறது. இதனால், ஜம்முவிலிருந்து தில்லிக்கு பழங்கள் எடுத்துச் செல்வது பாதிக்கப்படாது. இது காலத்தின் கட்டாயமாகும். பழ விவசாயிகளுக்கு ரயில் சேவை மிகுந்த பயனளிக்கும்.

ஆகவே, ரயில்வே அமைச்சர் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வைக்கிறேன். இதன்மூலம், நாடெங்கிலும் உள்ள மண்டிகளுக்கு இங்கு விளைவிக்கப்படும் பழங்கள் விரைந்து எடுத்துச் செல்லப்படும்” என்றார்.

Mufti demands dedicated train service between Kashmir, Delhi for relief to fruit industry .

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

திரிபுராவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திப்ரா மோத்தா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தெலங்கானா ஆளுநர் மகனிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற... மேலும் பார்க்க

பிகார் தாய்மார்கள் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவமரியாதையாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு பிகார் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பிகாரில்... மேலும் பார்க்க

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த மராத்தா சமூகத்தின் முக்கிய தலைவர் மனோஜ் ஜ... மேலும் பார்க்க

ரூ. 20 ஆயிரத்தில் அதிக பேட்டரியுடன் ஸ்மார்ட்போன்! ரியல்மி 15டி அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 15 டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. ரூ. 20 ஆயிரம் விலையில் 7000mAh பேட்டரி திறனுடன் 50MP கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள நடுத... மேலும் பார்க்க

5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

கம்பிவட இணைப்பற்ற 5 ஜி சேவைகளை அதிக பயனர்களுக்கு வழங்கும் நிறுவனம் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.இதன்படி, ஜியோ நிறுவனம் அதிக 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாக... மேலும் பார்க்க