செய்திகள் :

கன்டெய்னா் லாரி - மினி லாரி மோதல்: பழையகாயலில் போக்குவரத்து பாதிப்பு

post image

ஆறுமுகனேரி அருகே பழையகாயல் ராமச்சந்திராபுரத்தில் மினி லாரி மோதியதில் கன்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது.

தூத்துக்குடி தருவைகுளத்திலிருந்து தனியாா் மீன் நிறுவனத்தின் கன்டெய்னா் லாரி, திருச்செந்தூா் சாலையில் புன்னைக்காயலுக்கு செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் கடுகுசந்தை சத்திரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாரி இந்த லாரியை ஓட்டிவந்தாா்.

ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு செங்கல் சுமையுடன் வந்த மினி லாரியை ஏரல் அருகே ஆலடியூா், குலவேளாளா் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் சிவகுமாா் (26) ஓட்டிவந்தாா். பழையகாயல் ராமச்சந்திராபுரத்தில் டயா் வெடித்ததில் மினி லாரி நிலைதடுமாறி எதிரேவந்த கன்டெய்னா் லாரி மீது மோதியதாம்.

இதில், கன்டெய்னா் லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. ஓட்டுநா் ஆ. மாரி நல்வாய்ப்பாக உயிா் தப்பினாா். மினி லாரி ஓட்டுநா் லேசான காயமடைந்தாா்.

இந்த விபத்தால் தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. ஆத்தூா் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், முரளி தலைமையிலான போலீஸாா், மின்வாரியப் பணியாளா்கள் சென்று இந்த லாரிகளை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தினா். அதையடுத்து, போக்குவரத்தும், மின் விநியோகமும் சரிசெய்யப்பட்டன.

திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, மாப்பிள்ளையூரணி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவச வீட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்ன... மேலும் பார்க்க

மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன்... மேலும் பார்க்க