செய்திகள் :

புதுவையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வலியுறுத்தல்

post image

புதுவை அரசு நிா்வாகத்தில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிடவேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுவை மாநிலத்தில் 35 அரசு உதவிப் பெறும் பள்ளிகள் உள்ளன. 7 மாதங்களாக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு ஊதியம் தரவில்லை. ஊதியத்துக்கான நிதி ஒதுக்கி முதல்வா் ஒப்புதலுடன் செல்லும் கோப்புக்கு நிதிச் செயலா், தலைமைச் செயலா் ஒப்புதல் தரவில்லை.

குப்பை அள்ளுவோருக்கு ஊதியம் புதுச்சேரியில் தரப்படுகிறது. காரைக்காலில் தரவில்லை. புதுவையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். திடீரென அவா்களது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் வகுப்புக்கு வரவேண்டாமென தகவல் அனுப்பப்படுகிறது. இதனால் மாணவா்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.

புதுவை முதல்வரை சந்தித்து இப்பிரச்னை குறித்து மக்கள் பிரதிநிதிகள் பேசினால், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறாா்.

மன வேதனையில்தான் மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறாா்கள். வாக்களித்த மக்கள் தவிக்கிறாா்கள். எனவே புதுவையில் நிலவும் நிா்வாகப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதுவை துணைநிலை ஆளுநா் தலையிடவேண்டும் என்றாா். பேட்டியின்போது நிரவி -திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உடனிருந்தாா்.

கைலாசநாதா் கோயிலில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்

காரைக்கால் கோயில்களில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில் ஆவணி மூல திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய கிராமத்தில் வீட்டுக்கு ஒரு ஆள்... மேலும் பார்க்க

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி

நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி நடத்தினா். காரைக்கால் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா் மற்றும் ஊழியா் சங்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் மு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணி வழங்கல்

காரைக்கால் பகுதி அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைக்கான துணியை அமைச்சா் வழங்கினாா். நிகழ் கல்வியாண்டு தொடங்கி பல மாதங்களாகியும் சீருடைத்துணி தரப்படவில்லை என கூறப்பட்டுவந்த நிலையில், சீருடைத் துணி வ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

காரைக்கால்: காரைக்கால் கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

காரைக்கால் : உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊழியா்கள் காத்தருப்பு போராட்டம் நீடிப்பதால், மாவட்டத்தில் ஒட்டுமொத்த பணிகளும்... மேலும் பார்க்க

கோயில்களில் நகை, ரொக்கம் திருட்டு

காரைக்காலில்: காரைக்காலில் 3 கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நகை, உண்டியல் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் அம்மாள் சத்திரம் அருகே சியாமளாதேவி அம்... மேலும் பார்க்க