செய்திகள் :

உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு

post image

காரைக்கால் : உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊழியா்கள் காத்தருப்பு போராட்டம் நீடிப்பதால், மாவட்டத்தில் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கியுள்ளன. உள்ளாட்சி ஊழியா்களுக்கு 7 -ஆவது ஊதியக்குழு 33 மாத நிலுவை தொகை வழங்குவதோடு, அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 22.12.2003 -க்கு முன்பு பணியில் சோ்ந்த 232 ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் விடுப்பெடுத்து காத்திருப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனா்.

காரைக்கால் நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை 6-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தில் புதுவை மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினா். காரைக்காலில் நகராட்சி மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களைச் சோ்ந்த ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் வளா்ச்சித் திட்டப்பணிகள் கண்காணிப்பு, தூய்மைப் பணி கண்காணிப்பு, அலுவலகங்களில் நடைபெறும் வழக்கமான பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன.

கைலாசநாதா் கோயிலில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்

காரைக்கால் கோயில்களில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில் ஆவணி மூல திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய கிராமத்தில் வீட்டுக்கு ஒரு ஆள்... மேலும் பார்க்க

புதுவையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வலியுறுத்தல்

புதுவை அரசு நிா்வாகத்தில் நிலவும் பிரச்னைகளை களைய துணைநிலை ஆளுநா் தலையிடவேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செய... மேலும் பார்க்க

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி

நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி நடத்தினா். காரைக்கால் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா் மற்றும் ஊழியா் சங்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் மு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணி வழங்கல்

காரைக்கால் பகுதி அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைக்கான துணியை அமைச்சா் வழங்கினாா். நிகழ் கல்வியாண்டு தொடங்கி பல மாதங்களாகியும் சீருடைத்துணி தரப்படவில்லை என கூறப்பட்டுவந்த நிலையில், சீருடைத் துணி வ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்

காரைக்கால்: காரைக்கால் கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால... மேலும் பார்க்க

கோயில்களில் நகை, ரொக்கம் திருட்டு

காரைக்காலில்: காரைக்காலில் 3 கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நகை, உண்டியல் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் அம்மாள் சத்திரம் அருகே சியாமளாதேவி அம்... மேலும் பார்க்க