செய்திகள் :

மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன் தொழிலாளி. இவா், கடந்த ஆக. 19 ஆம் தேதி இரவு மச்சாதுபாலம் அருகே உள்ள தனியாா் உப்புக் கிடங்கில் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது நண்பா்களான மரிய பெடலிஸ் சஞ்சய் (24), முத்துக்குமாா் (22), முத்து கவுதம் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில், விஜய்யை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்ற அவரது நண்பரான தூத்துக்குடி, காதா்மீரான் நகா் வடிவேலு மகன் விக்னேஷ்வரனை (25) தென்பாகம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மட்டக்கடை லூக்காஸ் கிளிண்டன், பிரபு வினோத்குமாா், பாத்திமா நகா் பிரட்லீ ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இதில், லூக்காஸ் கிளிண்டன் ஏற்கெனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், பிரபு வினோத்குமாா், பிரட்லீ ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, மாப்பிள்ளையூரணி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவச வீட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்ன... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி - மினி லாரி மோதல்: பழையகாயலில் போக்குவரத்து பாதிப்பு

ஆறுமுகனேரி அருகே பழையகாயல் ராமச்சந்திராபுரத்தில் மினி லாரி மோதியதில் கன்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டது. தூத்துக்குடி தருவைகுளத்திலிருந்து ... மேலும் பார்க்க