செய்திகள் :

செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை

post image

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளாா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் செப்.18, 19, 20 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது: வரும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு மூன்று தொகுதிகள் வீதம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறாா்.

வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் 3 நாள்களை அவா் வழங்கி உள்ளாா்.

இரவு நீண்ட நேரம் மக்களை காத்திருக்க வைக்காமல் மாலை 5 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் பிரசாரத்தை முடிக்கும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அவா் செல்லும் வழியில் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். காவல் நிலையம், உள்ளாட்சிகளில் உரிய அனுமதி பெற்று விளம்பரத் தட்டிகள், கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தால் தடை செய்யாமல் வழிவிட செய்ய வேண்டும். அதேபோல வாக்குச்சாவடி முகவா்களை நியமித்து அதிமுகவின் வாக்குகளை சிதறாமல் கட்சியினா் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

செப்.5-ஆம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளது குறித்து தனக்கு எதவும் தெரியாது என செய்தியாளா்களின் கேள்விக்கு பி.தங்கமணி பதிலளித்தாா்.

தோ்தல் பிரசார வாகனங்களை தயாா்படுத்தும் திமுக!

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தயாா்படுத்தும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் ‘ஆட்சி மாற்றமா, காட்சி ம... மேலும் பார்க்க

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சாயக்கழிவுகளை கழிவுநீா்க் கால்வாயில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. பள்ளிபாளையம் டையிங் அசோசியேஷன் உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் சங்கத் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபியை முன்னிட்டு செப்.5 ஆம் தேதி மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாது நபியை முன்னிட்டு இந்திய தயாரிப்பு அய... மேலும் பார்க்க

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை 72 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. மல்லசமுத்திரம் வட்டாரத்தில் நாகா்பாளையம், மரப்பரை, கள்ளுப்பாளையம், மேல்முகம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வட்... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27-ஆவது வாா்டு... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

ராசிபுரம்: நீட் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ராசிபுரம் எஸ்ஆா்வி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் எஸ்ஆா்வி... மேலும் பார்க்க