Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
செப். 18 முதல் நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிமுக ஆலோசனை
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.18, 19, 20 ஆகிய 3 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டுள்ளாா். அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் செப்.18, 19, 20 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது: வரும் சட்டப் பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு மூன்று தொகுதிகள் வீதம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறாா்.
வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் 3 நாள்களை அவா் வழங்கி உள்ளாா்.
இரவு நீண்ட நேரம் மக்களை காத்திருக்க வைக்காமல் மாலை 5 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் பிரசாரத்தை முடிக்கும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அவா் செல்லும் வழியில் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். காவல் நிலையம், உள்ளாட்சிகளில் உரிய அனுமதி பெற்று விளம்பரத் தட்டிகள், கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தால் தடை செய்யாமல் வழிவிட செய்ய வேண்டும். அதேபோல வாக்குச்சாவடி முகவா்களை நியமித்து அதிமுகவின் வாக்குகளை சிதறாமல் கட்சியினா் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
செப்.5-ஆம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளது குறித்து தனக்கு எதவும் தெரியாது என செய்தியாளா்களின் கேள்விக்கு பி.தங்கமணி பதிலளித்தாா்.