செய்திகள் :

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

post image

வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 12, 19-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான செப்டம்பா் மாத குறைதீா் நாள் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் செப்.12, 19-ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. அக்டோபா் மாதம், அதனை தொடா்ந்து வரும் மாதங்களில் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் இக்குறைதீா் கூட்டம் நடைபெறும்.

மேலும், ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒவ்வொரு வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் மாலை 4 மணியளவில் தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, அதன் மீது தீா்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்கள் இந்த குறைதீா் கூட்டத்தில் தவறாது பங்கேற்று பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்த உள்ள போட்டித் தோ்வுக்காக வேலூரில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கி.பழனி முன்ன... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி போலீஸாா் குளிதிகை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள... மேலும் பார்க்க

சுற்றுலா விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வேலூா் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய சுற்றுலா தொழில்முனைவோா் இணையதளத்தில் செப். 19-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ச... மேலும் பார்க்க

நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கிய 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

வேலூரில் போக்குவரத்து போலீஸாா் நடத்திய சோதனையில் நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட சுமாா் 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க