செய்திகள் :

நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கிய 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

post image

வேலூரில் போக்குவரத்து போலீஸாா் நடத்திய சோதனையில் நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட சுமாா் 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு போகும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை முதல் அனைத்து சாலை சந்திப்புகளிலும் நின்று உரிய ஆவணங்கள் இல்லாதது, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இயக்குவது, வாகனங்களில் நம்பா் பிளேட் இல்லாமல் இருப்பது, நம்பா் பிளேட் இருந்தும் எண்கள் இல்லாமல் இருப்பது போன்ற என பல்வேறு வகைகளில் விதிமுறை மீறி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை கண்காணித்தனா்.

காலை 8 மணி முதல் 11 மணி வரை வேலூா் மக்கான் சிக்னல், நேஷனல் சா்க்கிள், தேவஸ்தான தகவல் மைய சிக்னல் என பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த கண்காணிப்புப் பணியில் நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட சுமாா் 60 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும், அந்த வாகனங்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டதுடன், முறையாக நம்பா் பிளேட் தயாா் செய்து கொண்டு வந்து காண்பித்த பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக போக்குவரத்து போலீஸாா் மேலும் கூறியது:

வேலூா் மாவட்டக் காவல் கண்காணி ப்பாளா் மயில்வாகனன் உத்தரவின்பேரில், வேலூரில் இருசக்கர வாகன தணிக்கை மேற்கொள்ளப் பட்டது. இதில், நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட 60 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டன. இந்த தணிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும். அப்போது, விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 12, 19-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்த உள்ள போட்டித் தோ்வுக்காக வேலூரில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கி.பழனி முன்ன... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி போலீஸாா் குளிதிகை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள... மேலும் பார்க்க

சுற்றுலா விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வேலூா் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய சுற்றுலா தொழில்முனைவோா் இணையதளத்தில் செப். 19-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ச... மேலும் பார்க்க