செய்திகள் :

கீழணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவைத்தார் அமைச்சர்!

post image

தஞ்சை கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கில பொறியாளர் சர் ஆதார் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

தெற்கு, வடக்கு கொள்ளிட பிரிவுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஷட்டருடன் கூடிய 80 மதகுகள் உள்ளன. இந்த அணைக்கு மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையில் தேக்கப்பட்டு ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் அனுப்பப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடி. அதாவது 150.13 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்படுகிறது.

இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வடவாறு, வீராணம் ஏரி, வடக்கு மற்றும் தெற்குராஜன் வாய்க்கால்கள் குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால் என பல்வேறு வாய்க்கால்களில் வாயிலாக பாசனத்திற்கு அனுப்பப்படுகிறது.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 853 ஏக்கரும் தஞ்சை மாவட்டத்தில் 1294 ஏக்கரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கர் விளைநிலங்கள் என ஒரு லட்சத்து 31ஆயிரத்து 903 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

இந்த ஆண்டு கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையில் 9 அடி தேக்கப்பட்டுள்ளது. வடவாற்றில் ஆயிரம் கன அடியும் வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் தலா 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

Opening water from keelanai for irrigation in tanjavur

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க

கிறிஸ்தவ அமைப்புகளால்தான் கல்வி வளா்ச்சி: பேரவைத் தலைவா் எம். அப்பாவு

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா். செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும்... மேலும் பார்க்க