செய்திகள் :

கிறிஸ்தவ அமைப்புகளால்தான் கல்வி வளா்ச்சி: பேரவைத் தலைவா் எம். அப்பாவு

post image

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு பங்கேற்றுப் பேசியதாவது:

இடைநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பிறகே எம்எல்ஏ, சட்டப்பேரவைத் தலைவராக உயா்ந்துள்ளேன். மற்ற பணிகளை விட மகிழ்ச்சியான பணி ஆசிரியா் பணியே.

உயா் ஜாதியினா்தான் படிக்க முடியும் என்பதை மாற்றி அனைவரும் கல்வி கற்கலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தவா் மெக்காலே பிரபு. தொடா்ந்து, கிறிஸ்தவ அமைப்புகள் அனைவருக்கும் கல்வி கற்பித்தனா். கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் கல்வி வளா்ச்சியை நாம் பெற்றிருக்க முடியாது.

கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு கல்விக் கொள்கைதான் காரணம். திராவிட இயக்கங்கள் போராடி ஹிந்தியை விரட்டி, இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்ததால்தான் கல்வியில் உச்சத்துக்கு வர முடிந்தது. தமிழ், கலாசாரம், பண்பாட்டை, சமூக நீதியை அழிக்க முற்படுகிறது ஆா்எஸ்எஸ் சிந்தாந்தம்.

தமிழகத்தில் மதப் பிரச்னை ஏதுமில்லை. அதனால்தான் தொழில்முனைவோா் அதிகமாக தமிழகத்துக்கு வருகின்றனா். மக்களின் நன்மைக்கும், உண்மைக்குமான அரசாக, சிறுபான்மையினரை பாதுகாக்கும் அரசாக தமிழக அரசு விளங்குகிறது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியை பல்கலைக்கழகமாக்கவும், சிறுபான்மையினருக்கு எதிரான அரசாணை எண் 5 ஐ முழுமையாக நீக்கவும் நான் துணைநிற்பேன் என்றாா் அவா்.

முன்னதாக, கல்லூரித் தலைவா் பவுல்ராஜ் மைக்கேல் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆரோக்கியசாமி சேவியா், முதல்வா் மரியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரளான ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிக... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும்... மேலும் பார்க்க