செய்திகள் :

எஸ்எஸ்விஎம் சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது

post image

கோவை எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சாா்பில் 4- ஆவது ஆண்டு ‘டிரான்ஸ்பாா்மிங் இந்தியா’ மாநாடு நடைபெற்றது. 3 நாள் மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை இளம் தலைமுறையினருக்காக தங்களை அா்ப்பணித்துள்ள ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

இந்த நிகழ்வில் கல்விக் குழுமத்தின் நிறுவனா் மணிமேகலை மோகன் வரவேற்றாா். ஸ்விக்கி ஃபுட் மாா்க்கெட் ப்ளேஸ் நிறுவனத்தின் தலைமைத் செயல் அலுவலா் ரோஹித் கபூா், பேட்மின்டன் முன்னாள் சாம்பியன் பிரகாஷ் பதுக்கோண், நெஸ்லே இந்தியா முன்னாள் தலைவா் சுரேஷ் நாராயணன், கூகிள் ஃபாா் எஜூகேஷன் நிறுவனத்தின் தலைவா் சஞ்சய் ஜெயின் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று ஆசிரியா்களுக்கு விருது வழங்கினா்.

இந்த விழாவில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பி.காா்த்திகேயன், கே.வசந்தகுமாா், புதுவை அரசு ஆரம்பபப் பள்ளி ஆசிரியா் இந்திரா பிரியதா்ஷிணி, தருமபுரி பெரியாம்பட்டி மகளிா் பள்ளி ஆசிரியா் ஷா்மிளா பேகம், திருவள்ளூா் மணவாளநகா் தொடக்கப் பள்ளி ஆசிரியா் எல்.ராதா உள்ளிட்ட சென்னை, பெங்களூரு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதைத்தவிர எஸ்எஸ்விஎம் பதிப்பு விருது என்ற பெயரில் 14 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க