செய்திகள் :

கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்: பொதுமக்கள் வேதனை

post image

கமுதி அருகே அரியமங்கலம், இடிவிலகி ஊராட்சி கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீரும் கருப்பு நிறத்தில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

இடிவிலகி ஊராட்சிக்குள்பட்ட கோசுராமன் கிராம மக்களுக்கு 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கப்படுகிறது. இந்தக் குடிநீா் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கருப்பு நிறத்தில் உள்ளது. இதனால் ஒரு குடம் தண்ணீா்ரூ.15 க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

குடிநீா் அசுத்தமாக உள்ளதால் தொற்று நோய் அச்சத்திலும் பொதுமக்கள் உள்ளனா். எனவே, கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா், மாவட்ட ஆட்சியா் நேரடியாக சென்று ஆய்வு செய்து சுத்தமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே காரடா்ந்தகுடி கிராமத்தில் மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகளை குடிமைப்பொருள் பாதுகாப்புத் துறை பறக்கும்படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நயி... மேலும் பார்க்க

அழகமடை-மேலவயல் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை-மேலவயல் கிராமப்புற சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிரா... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி வருகிற 11-ஆம் தேதி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் காா் மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

108,102 அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செப். 6, 7- ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக 105 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ... மேலும் பார்க்க