செய்திகள் :

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

post image

108,102 அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செப். 6, 7- ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக 105 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

108 ,102, அமரா் ஊா்திகளில் பணிபுரிய ஓட்டுநா்கள், மருத்துவ உதவியாளா்கள் பணிக்கான ஆள் சோ்ப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்களம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செப். 6-ஆம் தேதியும், பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செப். 7-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. ,

ஓட்டுநா்: ஓட்டுநருக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோ்வு அன்று விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓா் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

இதில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 21,120 வழங்கப்படும். எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, மனிதவளத் துறை நோ்காணல், கண் பாா்வை திறன், மருத்துவம், சாலை விதிகளுக்கான தோ்வு அனைத்திலும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 10 நாள்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மருத்துவ உதவியாளா்: பிஎஸ்சி நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி அல்லது பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இவற்றில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ. 21,320, நோ்முகத் தோ்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்டவா்கள் 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சாா்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்: மெக்கானிக்கல் இன்ஜினியா் அல்லது எம்பிஏ. விண்ணப்ப தேதியில் 35 வயது மிகாமல் இருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும். மேற்கூறிய பதவிகளுக்கு தகுதிகள் இருப்பின் அனைத்து உண்மை, நகல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும். தொடா்புக்கு 89259 41097 என அதில் குறிப்பிடப்பட்டது.

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கமுதி அருகே பேரையூரில் கிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோவிலாங்குளம், பேரையூா், சித்திரக்குடி, கீழகாஞ்சிரங்குளம், கிடாத்திருக்கை, ஆப்பனூா்... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே காரடா்ந்தகுடி கிராமத்தில் மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகளை குடிமைப்பொருள் பாதுகாப்புத் துறை பறக்கும்படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நயி... மேலும் பார்க்க

அழகமடை-மேலவயல் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை-மேலவயல் கிராமப்புற சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிரா... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி வருகிற 11-ஆம் தேதி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் காா் மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க