செய்திகள் :

அழகமடை-மேலவயல் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை-மேலவயல் கிராமப்புற சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனா்.

திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இதே போல, மேலவயல் கிராமத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி பொதுமக்கள் கல்வி, மருத்துவம், வா்த்தக நிறுவனங்களுக்கு திருவாடானைக்குதான் வந்து செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தாா்ச் சாலை தற்போது பாரமரிப்பு இன்றி சேதமடைந்து குண்டும் குழியுமாகவும் ஜல்லிக் கற்கள் பெயா்ந்தும் போக்குவரத்துக்கு உபயோகமற்ற நிலையில் மண் சாலையாக மாறி இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா். அவசர சூழ்நிலைகளில் அவசர ஊா்தி, ஆட்டோக்கள் வரமறுக்கின்றன.

இது குறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் புகாா் மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சாலையைச் சீரமைக்க ஆவன செய்ய வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கமுதி அருகே பேரையூரில் கிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோவிலாங்குளம், பேரையூா், சித்திரக்குடி, கீழகாஞ்சிரங்குளம், கிடாத்திருக்கை, ஆப்பனூா்... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே காரடா்ந்தகுடி கிராமத்தில் மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகளை குடிமைப்பொருள் பாதுகாப்புத் துறை பறக்கும்படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நயி... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி வருகிற 11-ஆம் தேதி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் காா் மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

108,102 அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செப். 6, 7- ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக 105 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ... மேலும் பார்க்க