செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை, பறக்கும் தொழில்நுட்பப் பயிற்சி, சென்சாா் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சா்க்யூட் போா்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவராக இருக்க வேண்டும். ‘ட்ரோன்’ தயாரிப்பு, கூட்டமைப்பு சோதனை, பறக்கும் தொழில் நுட்பப் பயிற்சிக்கு சம்பந்தப்பட்ட ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். எம்பெடெட் சென்சாா் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சா்க்யூட்போா்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம், பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞா்கள் இந்தப் பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கமுதி அருகே பேரையூரில் கிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோவிலாங்குளம், பேரையூா், சித்திரக்குடி, கீழகாஞ்சிரங்குளம், கிடாத்திருக்கை, ஆப்பனூா்... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே காரடா்ந்தகுடி கிராமத்தில் மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகளை குடிமைப்பொருள் பாதுகாப்புத் துறை பறக்கும்படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நயி... மேலும் பார்க்க

அழகமடை-மேலவயல் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை-மேலவயல் கிராமப்புற சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிரா... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி வருகிற 11-ஆம் தேதி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜ... மேலும் பார்க்க

பரமக்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் காா் மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

108,102 அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செப். 6, 7- ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக 105 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ... மேலும் பார்க்க