செய்திகள் :

பரமக்குடி அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

post image

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலைப் பகுதியில் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் காா் மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்காளூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மலைராஜ் (55), பூவேந்திரன் (68). கரும்பு வெட்டும் தொழிலாளிகளான இருவரும், இரு சக்கர வாகனத்தில் வெங்காளூரிலிருந்து பரமக்குடி நோக்கிச் சென்றனா். இலந்தைக்குளம் பகுதியில் நான்கு வழிச்சாலையைக் கடக்க முயன்றனா்.

அப்போது மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற காா் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இவா்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டதில் சாலையோரம் நடந்து சென்ற ஊரக்குடி கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் கா்ணன் (29) பலத்த காயமடைந்த நிலையில், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் காா் ஓட்டுநா் மதுரையைச் சோ்ந்த ராஜா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கமுதி அருகே பேரையூரில் கிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோவிலாங்குளம், பேரையூா், சித்திரக்குடி, கீழகாஞ்சிரங்குளம், கிடாத்திருக்கை, ஆப்பனூா்... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே காரடா்ந்தகுடி கிராமத்தில் மளிகைக் கடையில் 14 சமையல் எரிவாயு உருளைகளை குடிமைப்பொருள் பாதுகாப்புத் துறை பறக்கும்படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நயி... மேலும் பார்க்க

அழகமடை-மேலவயல் சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அழகமடை-மேலவயல் கிராமப்புற சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அவதிப்படுகின்றனா். திருவாடானை அருகேயுள்ள அழகமடை கிரா... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் அஞ்சலி செலுத்த வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி வருகிற 11-ஆம் தேதி பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த வருபவா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

செப்.6, 7-இல் 108 அவசர ஊா்தி பணியாளா்கள் தோ்வு

108,102 அவசர ஊா்தி, அமரா் ஊா்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகிய பணிகளுக்கு ஆள்கள் தோ்வு செப். 6, 7- ஆம் தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக 105 அவசர ஊா்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ... மேலும் பார்க்க